பெண்களின் விரல்களைக் காந்தள் மலருக்கு ஒப்பிடுவார்கள்.
திருகோணமலையில், என் வீட்டுத் தோட்டத்தில் நின்றது ஒரு கார்த்திகைச்செடி; அழகாக நெருப்பு வர்ணங்களில் பூக்கும்.
அது எப்படி என் தோட்டத்திற்கு வந்தது!
சிரமப்பட்டு நினைவுக்குக் கொண்டு வந்தால்...
ஒரு தினம் உப்புவெளியில் இருக்கும் என் பெரியதந்தையார் வீடு சென்று திரும்புகையில் பஸ்தரிப்பு நிலையத்தில் காத்திருந்த போது, வேலியோரத்தில் காடாய் முளைத்துப் பூத்துக் கிடந்த காந்தள்மலர்கள் மனத்தைக் கவரவும், கடத்தி இருந்தேன் கிழங்குகளை. ;)
இங்கும் கிழங்குகளை ஓர் கடையில் கண்டேன். ஆசையில் வாங்கிவந்தேன்.
திருகோணமலையில், என் வீட்டுத் தோட்டத்தில் நின்றது ஒரு கார்த்திகைச்செடி; அழகாக நெருப்பு வர்ணங்களில் பூக்கும்.
அது எப்படி என் தோட்டத்திற்கு வந்தது!
சிரமப்பட்டு நினைவுக்குக் கொண்டு வந்தால்...
ஒரு தினம் உப்புவெளியில் இருக்கும் என் பெரியதந்தையார் வீடு சென்று திரும்புகையில் பஸ்தரிப்பு நிலையத்தில் காத்திருந்த போது, வேலியோரத்தில் காடாய் முளைத்துப் பூத்துக் கிடந்த காந்தள்மலர்கள் மனத்தைக் கவரவும், கடத்தி இருந்தேன் கிழங்குகளை. ;)
இங்கும் கிழங்குகளை ஓர் கடையில் கண்டேன். ஆசையில் வாங்கிவந்தேன்.
வாங்கி வந்த இரண்டு கிழங்குகளில் ஒன்று மட்டும் செடியானது.
மொட்டு விட்டது. பூக்க ஆரம்பித்ததும் தான் இது வேறு நிறம் என்பது தெரிந்தது.
இங்குள்ள எல்லாவற்றிலுமே ஏதாவது ஒரு வேறுபாடு தெரிகிறது. ;)
ஆயினும் அழகு அழகுதான்.
அதில் மாற்றம் இல்லை.
அதுபோல் அவை இங்கு கார்த்திகையில் பூக்கவும் இல்லை.
முதல் முறையாகக் காய்த்ததை அவதானித்தேன்.
நீளமாக, பார்க்க ஓகிட் செடியில் வளரும் காய் போல் இருந்தது. எதிர்பார்த்ததற்கும் முன்பாக முதிர்ந்து காய்ந்தது. முத்து முத்தாய் விதைகள், சோளமுத்துக்கள் போல்.
முளைவிடுமா, நடுகைக்கு ஏற்ற காலம் எது என்பது போன்ற அறிவு எனக்கு இல்லை. செடி உள்ள அதே சட்டியில் புதைத்து விடலாம். முளை விட்டால் இதுதான் என்று தெரிந்து கொள்வேன். பார்க்கலாம்.
~~~~~~~~~~~~
காந்தள்மலர் கண்ணில் படும் போதெல்லாம் சுவாமி விபுலானந்தரின் 'ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று' தவறாமல் நினைவு வரும். இப்போதும் வருகிறது.
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
~~~~~~~~~
காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பிய கைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.
~~~~
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பிய கைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.
~~~~
பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்டமுறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.
வாட்டமுறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.