Wednesday 26 February 2014

கீவி நேரம்!

சென்ற வருட இறுதியில் தட்டி வைத்து படமும் சேர்த்திருந்தும், நேரமின்மை கரணமாக வெளியிடாது சேமிப்பில் இருந்த இந்த இடுகை கண்ணில் பட்டது. இப்போது உங்கள் பார்வைக்காக.

~~~~~~~~~~~~~~
05 / 12 / 2013
நேரம் பற்றாக்குறையாக இருக்கிறது. ;(

எல்லோருக்கும் இருக்கிற அதே 24 மணி நேரம் இமாவுக்கும் கிடைத்தாலும்... கொஞ்சம் இடிபாடான மாதம் இது.
காரணம்....
1. பாடசாலையில் வருட இறுதி - பரீட்சை, முன்னேற்ற அறிக்கை, புதிய ஆண்டுக்கான ஆயத்தங்கள்
2. பாடசாலையில் வீட்டிலும் பிறந்தநாட்கள். முன்னதில் 4 + வீட்டில் ஒன்று
3. இங்கு முன்கோடை - தோட்டம் செப்பனிடல் + செய்து முடிக்க வேண்டிய வெளி வேலைகள். காற்றுள்ள போதே தூற்ற வேண்டும். வெயில் உள்ள போதே முடிக்க வேண்டும்.

நேரம் கிடைத்தால் ஒரு வலைப்பூ; மறுமுறை இன்னொன்று என்று உடனே இல்லாவிட்டாலும் எப்படியாவது அனைவரையும் தரிசிக்க வருவேன். அதுவரை தயை கூர்ந்து பொறுத்தருள்க நட்புக்களே.

ஒரு குட்டிக் கதை மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்புகிறேன். ;)

பரீட்சைக்கு முன்பாக மீட்டல் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன. காலை இடைவேளையில் ஒரு கணித ஆசிரியை - கொஞ்சம் சின்னவர், முகம் சிவந்து சிரிப்பாக வந்து அமர்ந்தார்.

எல்லோரையும் ஆளுக்கு இரண்டு மணிக்கூட்டு முகங்கள் வரையச் சொல்லி இருக்கிறார். பின்பு இவர் குறிப்பிடும் நேரத்தை (முட்களை) அவர்கள் வரைந்து காட்ட வேண்டும்.

ஒரு மாணவி ஒரே ஒரு வட்டம் மட்டும் வரைந்து விட்டு வானம் பார்த்து (சுற்றிலும் ஏராளமாள கண்ணாடி ஜன்னல்கள்) இருக்க, அருகே போய் எண்களைக் குறிக்க உதவி விட்டு, அதை முடித்த பின் இரண்டாவது வட்டம் வரைந்து குறித்து வைக்கச் சொன்னாராம் ஆசிரியை.

வரைந்து முடித்து மாணவி கொண்டுவந்து காட்டிய மணிக்கூட்டில்.... 13 முதல் 24 வரை எண்கள் இருந்தனவாம்.  ;D

Saturday 15 February 2014

மலர் கொடுத்தேன்

ஹாய்! 
இமாவில் உலகத்தார் அனைவருக்கும் இமாவின் அன்பு வணக்கங்கள்! :-)
 _()_

சென்ற வருட இறுதியில்... பயண ஏற்பாடுகள், பாடசாலை ஆண்டு இறுதி வேலைகள் +++ என்று நேரமெல்லாம் போனதில், இங்கு அதிகம் எதுவும் பகிர்ந்துகொள்ள இயலவில்லை.

விடுறையின் போதும் நேரமின்மை + இணையத் தொடர்பு இல்லாமை என்று பகிர்வுகள் இல்லை. வீடு திரும்பிய பின்னாலும் சிலபல அவசிய வேலைகள். 


அவ்வப்போது அன்புள்ளங்கள் யாராவது 'இமாவின் உலகத்தை' வலைச்சரத்தில் அறிமுகம் செய்துவைக்க... கொஞ்சம் குற்ற உணர்ச்சி.

இதோ மீண்டும் வந்தேன். 

முதலில் வலைச்சரத்திற்கும் அங்கு என்னை அடிக்கடி நினைவுகூரும் அன்புள்ளங்களுக்கும் என் அன்பு நன்றிகளோடு....

இந்த மலர்ச்செண்டு