Thursday 19 October 2017

Obituary Notice of Mrs. Anthonia Jeyanathan

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Mrs. Anthonia Jeyanathan passed away peacefully at
Elizabeth Knox Home and Hospital, Auckland,New Zealand on the 18th of October 2017.
Anthonia was born on the 11th June 1936, in Batticaloa, Sri Lanka to Sebastiampillai and Sebamalai. She served as a teacher of Tamil at St Theresa's Convent (Batticaloa), St Mary's College (Trincomalee) and retired from service in 1985 after teaching at St Joseph's College, Trincomalee.
Anthonia is the beloved wife of Sevastianpillai Jeyanathan; loving mother of Immaculata Christopher Williams & Dr. Hilary Jeyaranjan; mother-in-law of Johnpillai Christopher Williams & Dr. Shanthi Jeyaranjan and much loved grand-mother of Allen Christopher Williams, Arun Christopher Williams & Dr Thivya Jeyaranjan.
Visitation will be from 2.00 p.m until 4.00 p.m on Sunday, 22 October 2017 at Davis Funerals, 400 Dominion Road, Mt Eden, Auckland.
A requiem mass for Anthonia will be celebrated at Our Lady of the Sacred Heart Church, Banff Avenue, Epsom on Wednesday, the 25th of October at 11.00 am and will be followed by a private cremation.
Dr. Hilary Jeyaranjan ( +64 274740303 )
Mrs. Immaculata Jeyam Christopher Williams (Jeya Jesu / Imma Chris) ( +64 21 1712348)
Image may contain: 1 person, smiling

Wednesday 4 October 2017

கா'தோடு' சொல்கிறேன்

தலைப்பு சிலசமயம் ஜிங் ஜிங் என்று மூளையில் வந்து உதிக்கும். சில சமயம் முடியைப் பிய்த்தாலும் ஊஹும்!

பாடசாலையில் ஓர் விஞ்ஞான ஆசிரியர் _ ஒரே இப்படி எழுதுவது சிரமமாக இருக்கிறது. Mr. B - தமிழில் மிஸ்டர். பா! ;(( இதுவும் பிடிக்கவில்லை. ;( ஒரு புனை பெயர் வைக்கலாம். ம்... பாரி - கடையெழு வள்ளல்களில் ஒருவர் பெயர். ;)

மீதி 6 பெயர்களும் நினைவிருக்கிறதா எனக்கு! சோதித்துப் பார்க்கலாம். பாரி, ஓரி, மலையன், எளி..இல்லை எ..ழினி. ;) நினைவு இருக்கிறது நன்றாக. பேகன், ஆய், நள்ளி. ஹையா! எனக்கு நானே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொள்கிறேன். :-)

பாரியைப் பற்றிச் சின்னக் காலத்தில் ஒரு சந்தேகம் இருந்தது எனக்கு. அவர் எப்படி முல்லைக்குத் தேர் ஈந்தார்!! ஔவையார் திரைப்படத்தை (கருப்பு வெள்ளையில்) பார்த்தும் புரியவில்லை. அப்போ எனக்கு முல்லைச் செடியைத் தான் தெரிந்திருந்தது; கொடியைத் தெரியாது.
அது என்ன முல்லைச் செடி என்கிறவர்கள் மேலே உள்ள படத்தைப் பார்க்கவும். இதற்கு ஒரு சக்களத்தியும் இருப்பது சில வருடங்களுக்கு முன்தான் தெரிந்தது. எனக்குத் தெரிந்த வரை... முல்லைக் கீரை... குப்பென்று வாசம் வீசும். அதை அனுபவிப்பதற்காகவே செடியைத் தட்டித் தட்டி விடுவேன். :-) ஆசையாகக் கேட்டேன் என்று சென்ற தடவை ஊர் போயிருந்த சமயம் மச்சாள் சொதி வைத்துக் கொடுத்தார்கள்.

சாப்பிடும் போதும், பிறகும் என்னிடமிருந்து எந்தப் பாராட்டும் கிடைக்காமல் போக, மச்சாள் கேட்டார், "ஜெயா, முல்லைக் கீரை சொதி - எப்பிடி இருந்துது?" நான்,,, "ஙே!!":-)
"இது முல்லைக் கீரைச் சொதியா?"
"ஓம், முன் வீட்டில இருக்கு. உங்களுக்காகப் பிடுங்கீட்டு வந்து வைச்சன். ஏன் நல்லா இல்லையா?"
"இது முல்லையே இல்லை! வேற என்னத்தையோ சமைச்சிருக்கிறீங்கள். ;))"
"இல்ல, முல்லை தான். நான் பிறகு காட்டுறன்."
அப்படியே சமையலறை ஜன்னலால் எட்டிப் பார்த்தார். "அந்தா... மதிலுக்கு மேலால தெரியுது பாருங்க."
எனக்குத் தெரியவில்லை. மதில் அருகே போய்ப் பார்த்தும் தெரியவில்லை. அதையும் சிலர் முல்லை என்கிறார்கள்.
http://www.arusuvai.com/tamil/node/25075 இங்கே அகத்திக் கீரைச் சொதி குறிப்பு இருக்கிறது. அதே போல இறுதியில் முல்லைக் கீரையைப் போட்டு சட்டென்று இறக்கினால் முல்லைச் சொதி தயார். துளிர் இலைகளாகத் தெரிந்து நடு நரம்பை மட்டும் நீக்கிவிட வேண்டும். இலையை மென்மையாகக் கையாள வேண்டும். சொதி கம்மென்று வாசமாக இருக்கும். சுடச் சுட சோறு, வெறும் முல்லைச் சொதியோடு... தேவாமிர்தம் எனக்கு.

;))) பாரியில் ஆரம்பித்து இங்கே வந்தேனா! ;)

இந்த வெள்ளைக்காரப் பாரி, ஒரு தடவை சின்னவர்களுக்கு 'கணக்கெடுப்பும் அதை வரைபாக்குதலும்' பற்றிக் கற்பித்தார். நாக்கு உருட்டுவது, நீலக் கண், ஒட்டிய காது என்று பல விடயங்களையும் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார். மாணவர்கள் தங்கள் தங்கள் நாக்குகளை எதிரே இருக்கும் மாணவர்களிடம் உருட்டிக் காட்டுனார்கள். எனக்கு நா துருதுருத்தது. அந்தச் சமயம் பார்த்து பாரி, "Not many can touch their nose with their tongue you know. Some can," என் மனம் குளிர்ந்தது. இப்போ மாணவர்கள் நாக்கால் மூக்கைத் தொட முயற்சித்தார்கள். யாரும் வெற்றியடையவில்லை.

என் அருகே இருந்த மாணவரிடம் ரகசியமாகச் சொன்னேன், "I can do that you know."
CAN YOU MISS!!!!"
"Shhh!!!! Promise to keep it a secred and I will show you," :-)

இப்போ பயிற்சி போதாததாலோ அல்லது நாக்கு கொழுத்துப் போயிருப்பதாலோ (உடலில் மீதி உறுப்புகளை விட நாக்குக்கு கொழுப்போடு அதிக தொடர்பு இருக்கிறது. அதுதான் முதலில் குண்டாகுமோ! எப்போதோ எங்கோ படித்த ஞாபகம். சரியாக நினைவுக்கு வரவில்லை.) தெரியவில்லை - மட்டுமட்டாகத்தான் தொட முடிகிறது.

அதையெல்லாம் விடுங்க. காது பற்றி ஒரு கதையாவது சொல்ல வேண்டாமா!

தெலுகு, கன்னடம் தெரிந்தவர்களுக்கு ஒரு கேள்வி. கலைமகளில் ஒரு ஜோக் படித்தேன். (இதுவும் சின்..னக் காலத்து நினைவுதான்.) ஒரு சத்திரத்தில் இருவர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கைத்தடியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கினார். உறக்கத்தில் அதை நகர்த்தி விட்டார். அது மற்றவர் காதில் மாட்டுவிட்டது. அவர், "காதுரா! காதுரா!" என்பார். மற்றவர் தடியை இறுக்கிப் பிடித்தபடியே, "நாதுரா! நாதுரா!" என்பார். இப்படியே மாற்றி மாற்றிச் சொல்வார்கள். எந்த வார்த்தை என்ன மொழிக்குரியது!! மறந்து போனேன். இப்போ அறிந்துகொள்ள ஆவல்.
கீழே கருத்து சொல்லும் போது, ஏஞ்சல் 'நாதுரா' என்பது தெலுகு சொல் என்று சொல்லி உதவினார்கள். நன்றி அஞ்சு. :-)
என் ஒற்றைக் காதணி இது. முன்பு சில காலம் செஞ்சிலுவைச் சங்கக் கடை ஒன்றில் தொண்டராகப் பணியாற்றிய சமயம் கிடைத்தது. என் கடமைகளுள் அங்கு வரும் உடைந்து போன, உதிர்ந்து போன நகைகளைத் திருத்துவதும் ஒன்றாக இருந்தது. திருத்திக் கொடுத்தவை போக மீந்து போனவற்றுள் பின்னால் கொக்கி உடைந்த இந்த ஒற்றைக் காதான் கிடைத்தது. குறட்டால் மீதி இருந்த கொக்கிப் பகுதியை உடைத்து நீக்கி அந்த இடத்தில் 'ப்ரோச் பின்' ஒன்றை 'ஹாட் க்ளூ' வைத்து ஒட்டினேன். எனக்கு மிகவும் பிடித்த ப்ரோச் இது. வேறு யாரிடமும் இராது. :-)

இடையில்

எப்போ எது என் சுவாசத்தைக் குழப்பி வைக்கும் என்பதை முன் கூட்டியே அறிந்து கொள்ள இயலாததால் கையோடு அட்டோமைசரைக் கொண்டு உலாவுவேன்.  இடையில் மாட்டும் பை மிக வசதி; நடக்கும் போதும் கைக்கெட்டும் தூரத்தத்தில் இருக்கும்.

சென்ற தவணை புதிதாக ஆசிரியை ஒருவர் எங்களோடு வந்து இணைந்திருந்தார். திங்களன்று மட்டும் வேலை, அதுவும் 4 பாடங்கள் மட்டும். காலை இடைவேளையில் சந்திப்போம். சற்று வயதானவர். எதனாலோ என்னைப் பிடித்திருந்தது.

ஆ!! இப்போது நினைவுக்கு வந்து விட்டது. :-)

சென்ற விடுமுறையில் பாடசாலை ஆசிரியர் அறையைப் புதுப்பித்திருந்தார்கள். பழைய சமையல் மேடையை நீக்கி விட்டு புதிதாக நடுவில் ஒரு மேசை (island) அமைத்திருக்கிறார்கள்.

அந்தத் தீவு பற்றிய விபரம் - நீளவாட்டில் பாத்திரங்களுக்கும் கத்தி, கரண்டிகளுக்குமாக இழுப்பறைகள் உள்ளன. இரு புறமும் ஒவ்வொரு சிறிய குளிரூட்டி, ஒரு மைக்ரோவேவ் குக்கர், டோஸ்டர் போன்றவற்றை வைக்க ஒரு இழுப்பறை. மேசை நடுவில் (நட்ட நடுவில்) சின்னதாக ஒரு குழாய். ("குளாய் இஸ் நாட் எ வர்ட் ஆன்டி," என்று ஒரு அசரீரி என் காதில் ஒலித்து சரியாக எழுதவைத்தது. அந்த நட்புக்கு  நன்றி. :-) )

தட்டையான தொட்டியும் மெல்லிய குழாயும் இருக்கும் அந்த வடிகட்டி அமைப்புக்கு இரண்டு அழுத்திகள் - ஒன்று கொதிநீர் வரவைக்கும்; ஒன்று குளிர் நீர் வரவைக்கும். இதிலிருந்துதான் தேநீர், கோப்பிக்கு (உப கதை கீழே)  கொதிநீர் எடுக்க வேண்டும். எம்பி, கையை நீ....ட்டி எடுக்கும் போது பருகும் ஆசையே கெட்டுவிடுகிறது. ;(

உபகதை -  இலங்கைக் கடைக்குப் போனோம் இன்று. அங்கு போனால் எனக்கு இருக்கும் தமிழும் மறந்து போகும். அத்தனை அருமையாக இருக்கும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் தம் பொருட்களில் கொடுத்திருக்கும் விபரங்கள். கோபி, திணை மா, விதம் விதமான 'பொறியள்'களோடு  'என்னை போட்ட கீரமீன்' கூட விற்பனைக்கு இருந்தது. ஹும்!  ஆறாம் கட்டளைக்கு விரோதமான பாவம்  எல்லாம் மனிதக் கொலைகளுக்கு மட்டும் தான் பொருந்துமா!! ;)

மைக்ரோவேவ் மறைவான இடத்திலிருக்கிறது. மேற்பார்வையாளர்களுக்கு தெரியவராது; என்னைப் போல் 'உயர்ந்த' மனிதர்கள் கண்ணிற்கு மட்டும் தெரியும். :-) தோழி தேடும் முன் ஒரு ஊகத்தில் இடம் காட்டி உதவினேன். பின்பு ஒரு சமயம் - வீட்டில் கொடித்தோடம்பழங்கள் காய்த்துக் குலுங்கிய சமயம் (என் பெரும் பொழுது செபாவுடன் கழிந்த சமயம்) நேரப்பற்றாக்குறை காரணமாக என்னால் பயன்படுத்த முடியாதிருந்தது. வீடு வீடாக விநியோகிக்கும் நிலையிலும் நான் இல்லை. தினமும் பாடசாலைக்கு கூடையில் எடுத்துப் போய் ஆசிரியர் கூடத்தில் வைத்து விடுவேன். கூடவே சில ப்ளாத்திக்குப் பைகளை வைத்துவிட்டால் அவரவர் தம் தேவைக்கு பையில் போட்டு எடுத்துப் போவார்கள். தோழியும் கொஞ்சம் வீட்டுக்குக் கொண்டு போவார். பாடசாலைக்கு மட்டும் கிட்டத்தட்ட 500 பழங்கள் எடுத்துப் போயிருப்பேன். ஒற்றைக் கொடியிலிருந்து கிடைத்த விளைச்சல் அத்தனையும்.

ஒரு நாள் இலையைச் சமைப்பது பற்றிப் பேச்சு வந்தது. மறு வாரம் கொடித்தோடைக் கீரை சம்பல் செய்து, அதைத் தனியே கொடுக்க இயலாததால் கூடவே சோறு, மரக்கறி என்று கட்டி எடுத்துப் போனேன். தோழி என்னோடு நெருக்கமாகிவிட்டார்.
~~~~
இடையில் மாட்டியிருந்த என் பையைப் பார்த்ததும், தன்னிடமும் தன் முன்னாள் கணவரது பழைய பை  ஒன்று இருப்பதாகவும் அதன் ஸிப் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

"நடுவில் பேனையால் குத்திப் பாருங்களேன்," என்றேன்.

"அது பித்தளை சிப், செழும்பு பிடித்திருப்பதால் சரிவராது," என்றார்.

"கொண்டுவந்தால் திருத்திக் கொடுப்பேன்," என்றேன்.

தொடர்ந்து வந்த திங்கள் மறந்திருந்தார். அதன் மறுவாரம் கொண்டுவந்து கொடுத்தார். உடனே என்னால் எதுவும் செய்ய முடியவிலை.

வீட்டிற்கு வந்து இழுத்துப் பார்க்க, வரவில்லை. ;(

குளியலறைக் குப்பைத் தொட்டியிலிருந்து தேய்ந்து போன சவர்க்காரத் துண்டை எடுத்து வந்தேன். ஓர் திரைப்படம் பார்த்துக் கொண்டே திறந்திருந்த ஸிப் கொக்கிகள் அனைத்திலும் தேய்த்தேன். பிறகு ஸிப் கைபிடியைப் பிடித்து அசைத்துக் கொண்டே இருக்க, வழிவிட்டது.

உள்ளே $15, 3 பேனைகள், லிப்ஸ்டிக், க்ளிப் 2. :-) அனைத்தையும் வெளியே எடுத்து வைத்துவிட்டு பையைக் கழுவி உலர விட்டு புதிதாக்கி எடுத்துப் போனேன்.

Tuesday 3 October 2017

மூன்றாவது இரண்டு

வணக்கம் வலையுலக நட்புகளே ! _()_ 

இந்த வருடம் இரண்டே இரண்டு இடுகைகளுடன் இமாவின் உலகை  அமைதியாக உறங்க விட்டிருக்கிறேனா!! ;(

என் தாயாரின் உடல் நலக் குறைவும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் என் நேரத்தை முழுமையாகவே ஆக்கிரமித்துக் கொண்டன. இப்போ விடுமுறை. 

சென்ற விடுமுறையில் என் நேரம் பெரும்பாலும் என் பெற்றோர் வசிக்கும் ஒய்வு இல்லத்திலேயே கழிந்தது. இம்முறை அங்கு செல்ல முடியவில்லை.  

'வைரல்' என்னும் சொல் இப்போ வெகு சாதாரணமாக எல்லோர் வாயிலும் புழங்குகிறது. :-) இவ்வருடம் இரண்டாவது தடவையாக வைரஸ் தாக்கியிருக்கிறது என்னை. பாடசாலைச் சின்னவர்கள் வழியே வந்தது, ஒரு மாதமாக என்னோடு ஒட்டிக் கொண்டு இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, எங்கள் பாடசாலையில் பலருக்கும் இதே பிரச்சினை. 

என் தாயாரது  நுரையீரல்கள்  பாதிக்கப்பட்டிருக்கின்றன. நான் போய்ப் பார்க்க, அவருக்குத் தொற்றினால் சிரமப்படுவார். அதனால் எனக்கு விடுமுறை. 

இதற்கு மருந்து ஏதும் தருவதில்லை. கொத்துமல்லித் தண்ணீர், ஊதுமக்கஞ்சி, பழங்கள், ஆவி பிடிப்பது என்று செய்ய வேண்டியதெல்லாம் செய்கிறேன். ஒய்வு முக்கியம் என்கிறார்கள். இன்றைய என் ஒய்வு நேரச்  செயற்பாட்டை உங்களோடு பகிர வந்தேன்.

என் மாணவர் தன் தாய்நாடான  லெபனானுக்கு  குடும்பத்தைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டார். அவர் வரும் வரை வேறு வகுப்பிற்கு உதவியாகச் செல்லப் பணிக்கப்பட்டிருக்கிறேன். சென்ற வாரம்  தையல் வேலையைத் தெரிந்துகொண்ட மாணவிகள் இருவருக்கு உதவிய இடைப் பொழுதில் என்னை ஈர்த்தது அருகே மற்ற மாணவர்கள் சிலர் செய்துகொண்டு இருந்த கைவேலை. சதுரப் பலகைகளில் சாமோவன், டொங்கன் சித்திர வடிவங்களைச் செதுக்கிக் கொண்டிருந்தார்கள். நான் விசாரிக்க ஆரம்பித்ததும், முயற்சி செய்து பார்க்கும்படி எனக்கும் ஓர் பலகைத் துண்டைக் கொடுத்தார்கள். 

செதுக்குவதற்கான ஆயுதங்கள் ஏற்கனவே என்னிடம் இருந்தன. பலகைக்கு
நேற்றே  'இந்தியன் இங்க்'  தடவிக் காய வைத்திருந்தேன். இன்று, முதல் முயற்சி. 

இந்தப் பக்கம் சில இடங்களில் ஒரு தடவைக்கு மேல் தீந்தை பூசப்பட்டுவிட்டது. பூசப்பட்டுவிட்டது என்ன! நான்தானே பூசினேன்! ;( அந்த இடங்கள்தான் செதுக்கிய இடங்களில் அசிங்கமாகத் தெரிகின்றன. ;(

'ஹங்சபூட்டுவ' (හංස පූට්ටුව - கழுத்துகள் பின்னிய வடிவிலான  ஒரு சோடி அன்னங்கள்)  வரைகிறேன் என்று ஆரம்பித்தேன். பிறகு ஒற்றை அன்னத்தோடு விட்டுவிட்டேன்.
இன்னொரு முறை பெரிய பலகையில் செதுக்கலாம் அதை. 

என்னிடம் உள்ள 'இந்தியன் மை'  நீரில் கரையும் போல் தெரிகிறது. (மாணவர்கள் வேறு சாயம் எதோ பயன்படுத்தியிருக்க வேண்டும். அவர்களது நல்ல கருப்பாக இருந்தது.) இதற்கு மேல் வாணிஷ் பூசுவதாக இருக்கிறேன். சின்னவரிடம்  இருக்கிறது என் வாணிஷ்  பேணி. அது வரும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லை. :-)

கொத்திக் கிளறியதை... க.கா.போ. 

செதுக்கிய கை வலிக்கிறது. நாளை மோசமாக வலிக்குமோ! :-) 

கன  காலம் கழித்துத் தட்டியிருக்கிறேன். பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டுக. காலை எழுந்து வந்து திருத்துவேன்.