Tuesday, 29 October 2013

அண்டாட்டிக்கா! ;)

part 1 - http://www.arusuvai.com/tamil/node/26973

part 2 - http://www.arusuvai.com/tamil/node/26974

குப்பைத் தொட்டியில் போடுமுன்னே....
ஒரு குழந்தை விளையாட்டு. ;)
அதை அறுசுவைக்கு அனுப்பி...
அழகு பார்த்து...
சந்தோஷமாகச் சின்னவர்களிடம் காட்ட - கேட்டார்கள்...

"அங்கின பனை மரமும் இருக்கோ மம்மி!!!" ;))))


Friday, 18 October 2013

வசந்தம் வருது


வசந்தம் வருது வசந்தம் வருதா! வயசுக்கு வந்தேனா! பொம்மைக் குழந்தை விளையாடப் பிடிச்சிருக்கு. அதை என்னருகே தூங்க வைச்சா இதமாய் மனசிருக்கு. மக்குப் பிள்ளை அது பேச மாட்டேன் என்குது கௌவித் தூக்கினாலும் கத்த மாட்டேன் என்குது. வசந்தம் வருது சொல்லுது மனசு சாப்பிடாமல் புல்லெல்லாம் சேர்த்து வைக்கச் சொல்லுது. வாசமான வைக்கோலும் வளைத்து வைக்கச் சொல்லுது. என் பிள்ளை அதன் மேலா!! குத்தாதா குச்சுகள்! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்றால் என் குஞ்சு மட்டுமென்ன பித்தளையா? மெத்தை வேண்டும் மெத்தென்று வல்லவளுக்குப் புல்லும் ஆயுதம்தான் - ஆனால் புல் மெத்தை போதாது என் செல்லச் சீமாட்டிக்கு. மெத்தென்று, மெத்து மெத்தென்று மெத்தை செய்வேன். மெல்லிதாய்ப் பறக்கும் மேகக் குவியல் போல மேனியெல்லாம் பஞ்சிருக்க இலவம் பஞ்செதற்கு! பிஞ்சு போச்சென் சின்ன வால் பஞ்சாய்ப் பதிப்பேனதை. என் பிள்ளைக்கில்லாதது எனக்கு மட்டும் எதற்காம்! அங்கங்கு கொஞ்சம் பிய்த்துப் பிய்த்து வைத்தால் பொன்னான படுக்கை சுகமாய்த் தூங்கும் என் குழந்தை - அது மென் குழந்தை! ஒன்றா! ஒன்பதா! எத்தனை பெறுவேன் நான்! அத்தனையும் கண்ணாய் வளர்த்தெடுக்க வேண்டும். பூனை கண்ணில் பட்டுவிடக் கூடாது. பூப்போடும் ஆலா தூக்க விடக் கூடாது. தூங்கும் சமயம் தூங்காது இருப்பேன் நான். துள்ளித் திரிந்தால் துரிதமாய் அடக்கிடுவேன். என்னைப் போல் அழகாய் எல்லாம் தெரிந்தவளாய் மெத்தென்று முகிலாய், தூக்கிய செவிகளும் சிவந்த கண்களும் சின்ன மூக்கும் செப்பு வாயும் சிப்பிப் பல்லும் பட்டுப் பாதமும் கொண்டு, வருவாளா! இல்லை... எலி பெற்ற பிள்ளை போல் கோணற்தலையும் குண்டுக் கண்ணும் குட்டி வயிறும் குச்சு வாலுமாய் குழந்தை பெறுவேனா! பொறுத்திருந்து பார்ப்பேன். அது வரை... பொம்மை இருக்கு பொழுது போய்விடும். - ட்ரிக்ஸி க்றிஸ் காட்சி இங்கே
கவிதை... அங்கே!

Thursday, 3 October 2013

மைக்ரோ எள்ளுருண்டை

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டாமா! ;)))

மகியின் ஆங்கில வலைப்பூவில் கொடுக்கப்பட்டிருந்த கருப்பு எள்ளுருண்டை குறிப்பின் கீழ், பாதிக்குப் பாதி வெள்ளை எள்ளும் கருப்பு எள்ளும் கலந்து செய்வதாகக் கருத்துச் சொல்லியிருந்தேன்.

இதற்கு முன் கருப்பு எள்ளு வாங்கியதில்லை. முதல் தடவையாக சாப்பிட்டிருக்கிறோம். வாங்கி வைத்தது இதிலும் தளகுளி நன்றாக வருமா என்பதை முயற்சிப்பதற்காக.

காற்கோப்பை கருப்பு எள், காற்கோப்பை  வெள்ளை எள் சேர்த்து வறுத்து....
4 மேசைக்கரண்டி அளவு சர்க்கரையை உடைத்துப் போட்டு ஆறவிட்ட எள்ளை அதனோடு சேர்த்து சுற்றி எடுத்தேன். சின்னதாகப் பிடிக்க முயன்றேன். இயலவில்லை. பத்து செக்கன் மைக்ரோவேவ் செய்து, கலந்து, மீண்டும் பத்து செக்கன் மைக்ரோவேவ் செய்து, கலந்துவிட்டு குட்டிக் குட்டியாக (பெரிய கோலி அளவு) 21 உருண்டைகள் பிடித்து வைத்தேன்.

படம் சுமார்தான், பொறுத்தருள்க. ;)

அடுத்த தடவை bring a plate for morning tea என்றால் பாடசாலைக்கு எடுத்துப் போகலாம். கட்லட்டும், கில் மீ டேட்ஸும், பட்டீஸும் எல்லோருக்கும் பிடித்திருந்தாலும் பழகி விட்டது. வித்தியாசமான உணவுப் பொருட்களை முயற்சித்துப் பார்க்க விரும்புபவர்கள் அவர்கள். இது சற்றுப் புதுமையாக இருக்கும். சுவை... நிச்சயம் அவர்களுக்குப் பிடிக்கும். எனக்கும் சிரமமில்லாத சமையல்.

மகியின் விதவிதமான எள்ளுருண்டை குறிப்புகள் இங்கே.

Tuesday, 1 October 2013

காலா லில்லி



ஒரு முறை பின்வீட்டு அங்கிளிடம் பேச்சுக் கொடுத்து காலா லில்லித் தாவரம் ஒன்று வாங்கி வைத்தேன்.
பூக்களைப் பிடுங்காமல் விட்டால் காய்களும் நிறைய வருகிறது. சில நாட்கள் முன்பாக எடுத்த படங்கள் இவை.
காலா லில்லி மலர்கள்
காய்கள் பழங்கள்
பறவைகள் பார்வைக்குத் தப்பியவை இவை.
குட்டித்தாவரங்கள்