Friday 30 August 2013

முதல் முதலாய்...

   தொடருமுன்...

முதல் முதலாயிட்ட இடுகை இது

அது தொடர்பான மேலதிக விபரங்கள் இங்கே 

 

புத்தாண்டுக்குப் பட்சணங்கள் தயாரிப்புக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தோடு சிரத்தையாகத் தயார் செய்த இடுகையை முதலாம் தேதியானதும் வெளியிட்டுவிட்டு ஆர்வத்தோடு இமாவின் உலகத்தில் போய்ப் பார்த்தால்... ;) வலையுலகுக்கு அன்று Thursday, 31 December 2009 என்றது. ஆனாலும் பரவசத்துக்குக் குறைவில்லை. கடைசியில்... சாதித்துவிட்டேன். ;D

சுருக்கமாக ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால்....

குட்டிப்பெண் ட்ரிக்ஸியை பஞ்சுக் குவியலாய் அணைத்து வீட்டுக்கு எடுத்து வந்து மெத்தென்று இறக்கிவிட்ட முதல்நாள் சந்தோஷம் அது.
 

மலைப்பு!

எனக்கொரு வலைப்பூ!!
மனசுக்குள்... மத்தாப்பூ ;)

 

பாதி நாள் அந்த சந்தோஷத்தை யாருக்கும் சொல்லாமல் எனக்குள் புதைத்து வைத்துக் கொண்டு... திறந்து பார்ப்பதும், மூடுவதுமாக... page view அன்றே சதம் அடித்திருக்கும். ;))) மனது பூரித்துப் பூரித்து பெரீ..ய பூரி ஆகி வெடித்துவிடும் போல இருந்தது. சந்தோஷம் கூட வேதனைதான் இல்லையா! அந்த வேதனை தாங்க முடியாமல் ஜீனோவுக்கும் அருணுக்கும் மட்டும் விபரம் எதுவும் சொல்லாமல் இணைப்பை அனுப்பிவிட்டு உட்கார்ந்திருந்தேன்.
பிறகு... வாணிக்கு.

முதல் இடுகையின் கீழ் கருத்துச் சொல்லி இருக்கும் நட்புக்களில் பலர் நட்புக்கள் என்பதை விட என் பிள்ளைகள் என்பேன். காணாமற் போயிருப்பவர்கள், வலையுகிற்கு மட்டும்தான் காணாமற் போனவர்கள்; இமாவின் உலகிற்கு இன்றும் வேண்டப்பட்டவர்கள்தான். Miss you Chanthoos. ;( 

பிறகு தொடர்ந்த மாதம், தினம் ஒரு இடுகை அதாவது... தை மாதம் இருபத்தேழு நாட்கள் இருந்திருந்தால். ;) பிறகு... மெதுவே குறைந்தது.... ஆர்வமல்ல. பொறுப்புகள் கூடி இருக்கிறது. தினப்படி நிகழ்வுகளில் எதற்கு முக்கியத்துவம் என்று யோசித்து வரிசைப் படுத்தி நிகழ்த்தி வர பிற்போடப்படும் விடயமாக என் உலகம் ஆகிவருகிறது. மெதுவாகவெனிலும்... சுற்றும். ;)

வலைமீட்டுப் பார்க்கிற சந்தோஷத்தைக் கொடுத்த
இளையநிலா... என்றும் இனிது பொழிக! 

என் வாழ்த்துக்கள்.

Wednesday 28 August 2013

காணாமற் போன செம்மறிகள்

நாளை வெள்ளி - மதிய இடைவேளைப் பூசைக்கான ஏற்பாடுகளை அறை எண் 16 மாணவர்கள் பொறுப்பெடுத்திருக்கிறார்கள். 'காணாமற்போன செம்மறி' பற்றிய உவமையை நடித்துக் காட்டப் போகிறார்களாம். 
நூறு செம்மறிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவது போல நான்கு செம்மறிகள் மட்டும் வருவார்களாம். தங்களுக்கு உரையாடல்களெல்லாம் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். நடித்தும் காட்டினார்கள். அவர்கள் உண்மையில் என்னை நாடியது முகமூடிகள் செய்வதற்காக. இடைவேளைகளின் போது கிடைத்த நேரத்தில் காகிதத்தில் ஒருவர் முகத்திற்களவாக வரைந்து பிடித்துப் பார்த்தோம். பிறகு அவர்களே அட்டையில் வரைந்து கொடுத்தார்கள். அட்டை மொத்தமாக இருந்தது. வெட்டிக் கொடுத்தேன். 
இங்கு என் யோசனை என்று எதுவும் இல்லை. உதவி மட்டும்தான் நான். நாடா வேண்டாம்; சுற்றிலும் தலைக்கு மேலாகவும் பட்டி போல் அட்டையை வெட்டி ஒட்டினால் தொப்பி மாட்டுவது போல மாட்டலாம் என்றார்கள். நேற்று மதிய இடைவேளையில் பார்த்தால் அறையில் ஒழிந்து உட்கார்ந்து பஞ்சு ஒட்டிக் கொண்டிருந்தார்கள். :-) என்னைக் கண்டதும் ஒருவர் தலையில் மாட்டி "மே..." என்றார். ;))

நாளை நான் பாடசாலையில் இருக்க மாட்டேன். நாற்பது மாணவர்களை அழைத்துக் கொண்டு Art Gallery போகிறோம். என்னால் சின்னவர்களின் நடிப்பு பார்க்கக் கிடைக்காது. ;(

இந்தப் படங்கள் அனைத்தும் சின்னவர்கள் எடுத்துக் கொடுத்தவை. நாளை மதியம் வரை யாருக்கும் தெரியக் கூடாதாம். நீங்களும் ஷுஷ்! ;)
நியூசிலாந்தில் காணாமற் போய் ஏழு வருடங்களின் பின்பு கண்டுபிடிக்கப்பட்ட செம்மறி ஒன்றின் கதை இங்கு இருக்கிறது. விரும்பினால் படித்துப் பாருங்கள். கதையின் முடிவு இங்கே.

Saturday 24 August 2013

ஆட்டோகிராஃப் கேக்

பாடசாலையில் பூசைக்காக இம்முறை செய்த கேக் இது.
கேக் செய்தவர் - எங்கள் பகுதித்தலைவர்
வெள்ளை ஐசிங் &....
...சிலுவை - நான்
தேவதிரவிய அனுமானம் பெற்றுக் கொண்ட அனைவரது கையொப்பங்களும் இதில் உள்ளன.

Tuesday 20 August 2013

சின்னவர்கள் செய்த 'பானர்கள்'

வருகிற 23ம் தேதி வெள்ளியன்று பாடசாலையில் ஒரு முக்கிய நாள். அன்று இருபத்தெட்டு மாணவர்களும் ஒரு ஆசிரியையும் பாடசாலைத் திருப்பலியின்போது திருவருட்சாதனங்கள் பெற இருக்கிறார்கள். சில மாதங்களாக வகுப்புகள் நடக்கின்றன.

இறுதி நாளன்று அலங்கரிப்பதற்கென்றும் பின்னால் அவர்கள் நினைவுக்காக வைத்திருப்பதற்காகவும் 'பானர்கள்' தயாரித்தார்கள்.
 ஃபெல்ட் துணியை ஒரேயளவாக வெட்டி....
 மேற்புறம் மடித்து...
 ஒரு வரி அடிக்கவேண்டும்.
கடகடவென்று அப்படியே தொடராக அடித்து எடுத்துப் போனேன்.
குறிப்பிட்ட சில டிசைன்களிலிருந்து தெரிந்து தங்களதை வடிவமைத்துக் கொண்டார்கள். 
 
 
 
 
 
 
பிறகு தங்கள் பெயர்களையும் ஒட்டினார்கள். 
துணியைச் சுருங்க விடாமல், ஒரு நீள ஸ்ட்ரா முனையில் நூல் கட்டி  கோர்த்து வைத்திருக்கிறேன். 
கடைசி நாள் படம் எடுக்கக் கிடைக்காது. அன்று காலை ஆறு மணி முதல் மூன்றரை வரை தொடர்ந்து வேலைகள் இருக்கின்றன.

Tuesday 13 August 2013

ஒரு கேக்கின்... இறுதி நாள்


இமாவின் உலக நட்பு வட்டத்திற்காக ஒரு கேக்.
 
ENJOY :-)

Thursday 8 August 2013

ஒரு கேக்கின் டைரி 7

7ம் நாள் (08/08/2013)
 
இப்படி இருந்ததை...
 
 
கலக்கி ....
 

இப்படி....
- Herman the German Friendship Cake

Wednesday 7 August 2013

சிங்கமும் முயலும்

எப்போதோ குமுதத்திலோ ஆனந்தவிகடனிலோ படித்த ஜோக் ஒன்று... 

நாடகத்தில நடிச்ச  அனுபவம் இருக்கா?
இருக்கு. அரிச்சந்திரன் நாடகத்தில நடிச்சிருக்கேன்.
அதில அரிச்சந்திரன் வேஷமா?
இல்ல, சந்திரமதி...
ஓ! சந்திரமதியா?
...கைல தூக்கிட்டுப் போவாங்கல்ல இறந்து போன லோகிதாசன்...

முதல் தடவை இந்த நகைச்சுவையைப் படித்த போது சிரிப்புக்குப் பதில் குழப்பம்தான் வந்தது. இதிலென்ன நகைச்சுவை இருக்கிறது! நிச்சயம் ஒரு குட்டிப் பையனுக்கு பிணம்போல நடிப்பது சுலபமாக இருந்திராது.

நெற்றியில் பட்டை, அம்மா சந்திரமதியிடமிருந்து விடைபெற்று இன்னும் சில குட்டீஸோடு தருப்பை சேகரிக்க கிளம்பிப் போகும் சமயம்... சோ...கமாக முகத்தை வைத்திருக்க வேண்டும்.

பிறகு... பாம்பு கொத்தும். (ஆனால் கொத்தாது.) டைமிங் பார்த்து சருகுகள் மேலே விழுந்து படுத்தால்.... பிறகு அம்மா சந்திரமதி தலைவிரி கோலமாக, தூக்கிக் கொண்டு பாடு பாடு என்று பாடிக் கொண்டு மேடை முழுக்க வலம் வருவார்கள்.

பிறகு.... சருகுக் குவியலில் போட்டு... குட்டி பூச்சீஸ் இருக்காதா!! பயம்!  அரிச்சந்திரன் நடிப்பாக விட்டாலும்... உதை உதைதான். அனுபவம். ;)

பிறகு... ஒரு முறை 'சிங்கமும் முயலும்' - புத்திசாலியான மெய்ன் முயலாக இல்லாமல் கூட வசிக்கும் இன்னொரு முயல் வேடம்.
இன்னொரு முறை குசேலர் குழந்தைகளில் ஒன்றாக 'அம்மா... பசிக்குதே!' வேடம்.
அதன் பின்... ஆசிரியர்கள் என் திறமையை நன்றாகப் புரிந்துகொண்டார்கள். யாருமே ரிஸ்க் எடுக்கவில்லை. என்னை நிம்மதியாக விட்டுவிட்டார்கள். 
~~~~~~~~~~

வாலை ஒட்ட நறுக்கிருவேன்!
சிங்கமானாலும்... சிங்கிளா மாட்டப்படாதோ!
 முதலில் லேபிள், அடுத்து காது, பிறகு வால் என்று பிடுங்கிவிட்டாலும் இந்தச் சிங்கத்தின் மேல் ஒரு தனிப் பிரியம் ட்ரிக்ஸிக்கு.
 தன் குட்டி அது என்னும் எண்ணமோ தெரியாது, எப்பொழுதும் குரங்கு குட்டியைத் தூக்கித் திரிவது போல  தூக்கிக் கொண்டு அலைகிறார். ஒவ்வொரு இடமாக மாற்றி மாற்றி வைப்பார். கூட்டுக்கு வெளியே சில குறிப்பிட்ட இடங்களில் தூங்கப் பிடிக்கும் ட்ரிக்ஸிக்கு. அங்கு தன் அருகே சிங்கத்தையும் தூங்க வைத்திருப்பார்.
 
கொஞ்ச நேரம் தட்டிக்கு மேலே வைக்கலாமா!

ஒரு கேக்கின் டைரி 6

ஆறாம் நாள் (07/08/2013)

இப்படி இருந்ததை...
 
 கலக்கி விட....

இப்படி ஆனேன்.


- Herman the German Friendship Cake

Tuesday 6 August 2013

ஒரு கேக்கின் டைரி 5

ஐந்தாம் நாள் (06/08/2013)

நன்கு கலக்கி... ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு...

 

உணவாக 1 கோப்பை மா, 1 கோப்பை சீனி, 1 கோப்பை பால் சேர்த்துக் கலக்கி துணியால் மூடினார்.

- Herman the German Friendship Cake

Monday 5 August 2013

muyaluku 2 kal


ஒரு கேக்கின் டைரி 4

நான்காம் நாள் (05/08/2013)
 
ஒருமுறை கலக்கி வைத்தார்.

- Herman the German Friendship Cake

Sunday 4 August 2013

ஒரு கேக்கின் டைரி 3

மூன்றாம் நாள் (04/08/2013)

ஒரு குறிப்போடு இமாவின் பங்கு இமாவிடம் வந்து சேர்ந்தது. அவர் தன் பங்குக்கு ஒரு முறை நன்கு கலக்கிவிட்டு துணியினால் மூடி சமையல் மேடையில் வைத்தார்.
குளிரூட்டியில் வைத்தால் இறந்துவிடுமாம். 

  

- Herman the German Friendship Cake

Saturday 3 August 2013

பனி மனிதர்கள்

சின்னவர்களுக்கு வாரம் ஒரு முறை 'Home Learning Sheet' ஒன்று கொடுக்கப்படும். அதன் விளைவாக ஒரு வாரம் பாடசாலைக்கு வந்த 'பனிமனிதர்கள்' சிலர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்கள்.
ஹாய்! சொல்லுங்க மக்கள்ஸ்...
 
 ம்... இமா காணாம போய்ட்டாங்க. வர கொஞ்ச (அதிக) நாள் ஆகுமாம். அதுவரை போஸ்ட் மட்டும் வருமாம். சொல்லச் சொன்னாங்க. சொல்லிட்டேன். இப்படிக்கு... ட்ரிக்ஸி

ஒரு கேக்கின் டைரி 2

இரண்டாம் நாள் (03/08/2013)
 
  

ஒருமுறை கலக்கி வைத்தார்.

- Herman the German Friendship Cake

Friday 2 August 2013

ஒரு கேக்கின் டைரி

02/08/2013 -

இமாவின் மருமகள் பிறந்ததினம். அன்பளிப்பாக ஏற்கனவே இரண்டு கேக்குகள் கிடைத்திருந்ததால் பேக் செய்ய வைத்திருந்த கேக் மாவுக் கலவையை நான்காகப் பிரித்து ஒரு பங்கைத் தனக்கு வைத்துக்கொண்டு மீதி இரண்டையும் தோழிகளுக்கு அன்பளித்துவிட்டார்.
 
நான்காவது பங்கை இமாவுக்காக ஒரு டப்பாவில் எடுத்து வைத்தார்.

- Herman the German Friendship Cake