கோடை விடுமுறை முடிந்து புத்தாண்டிற்காக நாளை மீண்டும் பாடசாலை திறப்பு விழா.
அதற்காக வலைப்பூவுக்கு மூடுவிழா எல்லாம் கிடையாது. அவ்வப்போது வந்து ஏதாவது 'அறுவடை' வெளியிட்டுப் புகை போக வைப்பேன். ;)
விடுமுறையில் முடிக்க நினைத்திருந்த வேலைகள் எல்லாம் முடித்து விட்டேனா!!! பெரிய வேலைகளை முடித்திருக்கிறேன் என்பது மனதுக்குத் திருப்தியாக இருக்கிறது. சில குட்டிக் குட்டிக் காரியங்களை மட்டும் - அவை குட்டியாக இருப்பதாலேயே நாளை, நாளை என்று கடத்தி... இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. நாளை எங்கே போகப் போகிறது, பிறகு பார்க்கலாம்.
இப்போ நேற்றைய கதை, குட்டித் தோழி அவுஸ்திரேலியாவில் இருந்து இரண்டு நாட்கள் முன் திரும்பி விட்டார். (அவர் குட்டித்தம்பி 'மூஸ் மூஸ்' என்று மூக்கையும் வாயையும் பிடித்துக் கங்காரு முகம் காட்டுகிறார்.)
நேற்று தோழியின் ஆறாவது பிறந்தநாள். அன்பளிப்பு ஏற்கனவே தயாராய் வாங்கி வைத்திருந்தேன். பதினோராம் மணிநேரம், பொதி சுற்றுவதற்குப் பொருத்தமாகக் கடதாசி கிடைக்கவில்லை. கண்ணில் பட்டன முன்பு அறுசுவைக்காகச் செய்து அனுப்பிய 'அன்பளிப்புப் பைகள்'. நீளம் போதவில்லை. எனவே ஒரே வர்ணத்தில் அமைந்த இரண்டு பைகளை ஒன்றுக்குள் ஒன்றாகப் போட்டு வைத்தேன்.
கூடவே கண்ணில் பட்ட மீதிப் பைகள் இவை.
'கான்ஃபிடி' & கிறிஸ்டல் பூக்கள்
ரிப்பன் & பின்னல்வேலைப் பூ
பஞ்ச் பூக்கள்
'கிஃப்ட் ராப்' பை
'கான்ஃபிடி'
செய்முறைக்கு பார்க்கhttp://www.arusuvai.com/tamil/node/10049