Saturday 25 April 2020

வளையல் செய்தேன்!

அம்மாவின் நினைவாக அவர் பயன்படுத்திய பொருட்களை பெட்டியொன்றில் சேமித்து வைத்திருக்கிறேன். பொருட்களின் இடையே அவரது பற்தூரிகை இருந்தது.

பயன்படுத்தியது - என்றோ நிச்சயம் குப்பைக்குப் போய்விடும். அணிகலனாக மாற்றினால்! என்றோ யூட்யூபில் பார்த்த கைவினை நினைவுக்கு வர, தேடினேன்.
குறட்டினால் குஞ்சத்தை நீக்கி, (தகடுகளைக் கொண்டுதான் இறுக்கி இருப்பார்கள். அவற்றையெல்லாம் நீக்கிவிட முடிந்தால் நல்லது.) இன்னொரு பழைய தூரிகையால் அந்த இடத்தைத் தேய்த்துச் சுத்தம் செய்தேன். புதிதாக இருந்தால் கழுவும் வேலை இல்லை. நேரடியாகவே காரியத்தில் இறங்கலாம்.

தட்டையான சட்டியில், கொதிநீரில் தயார் செய்து வைத்திருக்கும் தூரிகைக் கட்டையைப் போட்டு இளகவிட்டேன். நான்கைந்து நிமிடங்கள் கழித்து சமையலறை இடுக்கியினால் பிடித்து எடுத்து துணியில் பிடித்து முறுக்கிக் கொண்டேன். முன்பே என் கையை அளந்து பார்த்ததில் வளையல் பெரிதாகவே வரும் என்று தெரிந்தது. அதனால்தான் முறுக்கு வளையல் செய்ய முனைந்தேன்.

அடுத்த தடவை சற்று நேர்த்தியாகச் செய்ய வேண்டும்.
முக்கிய குறிப்பு:- வளையலில் முறுக்கிய பகுதியை உள்ளங்கையில் வரும் விதமாகப் பிடித்து அணிந்தால் சுலபமாக அணியலாம்.

10 comments:

  1. நன்றாக செய்து உள்ளீர்கள்...

    ReplyDelete
  2. Thanks... Elango! :) I knew there was a typo. Tried to change it a couple of times yesterday and gave up. :( Will try again tonight.

    ReplyDelete
  3. கைவண்ணத்தில் , நீல வண்ண வளையல் அழகா மிளிர்கிறது...😍😍

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா