Thursday 2 May 2013

இலையொன்று காண்பீர்!

1.  தாமதத்திற்கு வருந்துகிறேன். ;(

2. முன்கதைச் சுருக்...come ;) ங்கே


3. பதில் சொல்லாமல் நழுவியவர்கள் அனைவர்க்கும் இமாவின் உலகம்... 'நழுவல் திலகம்' என்கிற பட்டம் கொடுத்து கௌரவிக்கிறது. ;)


4. ந்திருந் தில்ள் :-
evergreen, fern, சாத்தாவாரி - இந்த மூன்றிலொன்று சொல்லி இருந்தால், "விடைக்குப் பக்கமாக வந்துவிட்டீர்கள்," என்று சொல்லியிருப்பேன்.
5. முடிவு
ஈட்டி என்றேன். 
ஈட்டிக்கு ஆங்கிலம்..  என்ன? 
                                        என்ன!! 
                                        என்..ன!?!?

spear... பதில்...as..pa..ra..gus ;)





15 comments:

  1. அவ்வவ் :)) மகி நமக்கு பொற்காசுகள் ஜஸ்ட் மிஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. நான் தயாராக வைத்திருந்தேன். யாருமே சரியான பதில் சொல்லாததால முருங்கைல வைச்சாச்சு. ;))

      Delete
    2. ஹா.. ஹா..ஹா.. மீ ஓல்ரெடி அங்கினதானே சிட்டிங்:)

      Delete
    3. ;)) முருங்கைல அதீஸைக் காணோமே! மகிதான் அங்க இருக்கிறா. மிச்ச ஆட்கள் எடுக்கமுதல் கெதியாப் போங்கோ அஞ்சூஸ்.

      Delete
  2. நம்பவே முடியல இமா. ஆஸ்பராகஸை வளரவிட்டால் இப்படிதான் இலை வருமா? அதையும் விட்டுவைக்கவில்லையா நீங்க? அழகா தொட்டியில் வளர்த்திருக்கீங்க.. வளர்ந்தபின்னாலும் சமைக்கலாமா? (எவ்வளவு கேள்விகள் தோன்றுது பாருங்க!)

    உங்க தயவால் நிறைய விஷயம் தெரிந்தது. நன்றி இமா.

    ReplyDelete
    Replies
    1. //இப்படிதான் இலை// ஆமாம்.
      முதல் 2 வருடங்கள் அறுவடை செய்வது செடிக்கு நல்லதில்லை. (ஆனால் ஒன்றிரண்டாவது பிடுங்கிருவேன்.) ;) அறுவடை செய்யாமல் விடும் எல்லா ஈட்டிகளும் ;) இப்படி வளரும். பார்த்திருக்கப் பெரிதாகும். உயரவிட்டால் மெல்லிதாகிரும். குட்டையாக குண்டாக இருக்கும்போது அறுவடை செய்தால்தான் சதைப்பிடிப்பாக இருக்கும். சீசன் முடியும்போது மீதியையும் அப்படியே விட்டுவிடவேண்டும். குட்டிப் பூக்கள் வந்தது. ஃபோட்டோ காணோம்.

      //அழகா தொட்டியில் வளர்த்திருக்கீங்க..// இடம் இல்லையே. இங்க இருக்கிற தரைல வைச்சா பக்கத்து வீட்டில்தான் ஈட்டி வளரும். அவங்க சாப்பிட்டால் பரவாயில்லை. இல்லாம லோன்மூவர்ல போனா.. என் சிரமம் வீண்.

      //வளர்ந்தபின்னாலும் சமைக்கலாமா?// இல்லை. பிறகு பசுமைப் பஞ்சுமிட்டாய் போல இருக்கும். அழகாக இருக்கும். அப்பப்போ இப்படி கொஞ்சம் கார்னிஷிங் வேலைக்கு வேண்டுமானால் எடுக்கலாம்.

      Delete
    2. சந்தேகங்களை உடனடியாய்த் தீர்த்துவைத்தமைக்கு நன்றி இமா.

      Delete
    3. சந்தோஷம் கீதமஞ்சரி.

      Delete
  3. அப்பாடா... தெரிந்து கொண்டேன்... ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... ஹிஹி...

    பட்டத்திற்கு நன்றி...

    ReplyDelete
  4. இமாஆ...

    அட இதுவா?
    என் அறிவுக்கு எங்கே இதெல்லாம் எட்டப்போகுது...:)

    மிக்க நன்றி...:)

    ReplyDelete
  5. என்ர பெருமானே.. அஸ்பரகஸ் இப்பூடியா இருக்கும்? நான் நினைச்சேன் அது நிலத்தில் வளரும் தாவரம் என.. இது கொடியாகவெல்லோ இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ;) இது மட்டும் என்ன வானத்திலயே வளர்ந்திருக்கு.
      கொடி என்றும் இல்லை அதீஸ். தண்டு மெல்லிசா இருக்கு. காட்டில பக்கத்துச் செடிகளில தாங்கிக் கொண்டு வளரும் போல.

      Delete
  6. //பதில் சொல்லாமல் நழுவியவர்கள் அனைவர்க்கும் இமாவின் உலகம்... 'நழுவல் திலகம்' என்கிற பட்டம் கொடுத்து கௌரவிக்கிறது. ;)// அப்பாடி..நான் ந.தி. இல்லே! :)

    ஏஞ்சல் அக்கா, நாந்தான் குறுக்குவழில பதிவு வந்த கொஞ்ச நேரத்திலயே கண்டுபுடிச்சுட்டேன் என சொன்னேனே! ;) பொற்காசுதானே..போனாப் போகுது விடுங்க. இமா அடுத்த போஸ்ட் போட்டிருக்காக..அந்தக் காசெல்லாம் நமக்கே நமக்குத்தான்! :)

    ReplyDelete
  7. நழுவல் திலகம்..ஆஆஆஆ.... :) பாட்னி டீச்சர் கலக்கறீங்க..;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா