Sunday 23 June 2019

கை வேலை!

எப்படி யோசித்தாலும் ஒரு சொல்லுக்கு மேல் தலைப்பு எதுவும் தோன்றவில்லை. :-)

 ஒரு நாள்... க்றிஸ் ஏதோ வேலையாக இருந்தார். சீமெந்து குழைப்பதை மட்டும் கவனித்தேன். (இடையில் கொஞ்சம் எடுபிடி வேலையும் செய்தேன்.) வேலை முடியும் தறுவாயிலிருக்கையில்... நான் முயற்கூட்டைச் சுத்திகரிக்கும் வேலையிலிருந்தேன். கையிலிருந்து ரப்பர்க்கையுறையை நீக்கும் சமயம் க்றிஸ் வேலையை முடித்து மீதிக் கலவையுடன் வெளியே வந்தார். கொட்டிவிட மாட்டார் என்று தெரியும். ஏதாவது ஒரு தேவை கண்டுபிடிப்பார் அதற்கு. 
"என்ன செய்யப் போறீங்க அதை?" என்றேன்.
"ஏன்? வேணுமா?"
"ம், கனகாலம் முன்னுக்கு ஸ்கூல் ஜேனல்ல ஒரு கைவேலை பார்த்தன். க்ளவ்ல தண்ணி நிரப்பி ஃப்ரீசர்ல வைச்சு எடுக்க கை மாதிரி வந்திருந்துது. சீமெந்தை நிறப்பினாலும் அப்பிடி வரும்தானே! ட்ரை பண்ணிப் பார்க்க விருப்பம்." 
"க்ளவ்வை ரெடியாக்கினால் நிறப்பிவிடுறன்."
"உள்ளுக்கு கம்பி ஏதும் வைக்காட்டி பிலனா இருக்குமா?"
"இருக்கும், என்ன செய்யப் போறீங்க எண்டதைப் பொறுத்தது அது."
கையுறையை நான் பிடிக்க க்றிஸ் கொஞ்சம் கொஞ்சமாக சீமெந்தை உள்ளே நிரப்பினார். சமையலறையிலிருந்து ஒரு 'க்ளிப்' எடுத்து வந்து மாட்டிவிட்டு அப்படியும் இப்படும் விரல்களை மடித்துப் பார்த்தேன். மேசையில் வைத்தால் கை போலவே இல்லை. இந்த வருடம் தானாக விளைந்த பூசணிக்காய்கள் எட்டு மேசையில் இருந்தன. சிறியதாக இருந்த காயின் பின்புறம் பூவின் அடையாளம் இன்னும் குண்டாக இருந்தது. கையை அதன் மேல் போட, சற்று வளைந்தாற்போல் அமர்ந்துகொண்டது.

ஓரு வாரம் வரை அப்படியே விட்டுவிட்டேன். 
நன்கு காய்ந்த பிறகு ரப்பரை உரித்து எடுக்க...
இப்படித் தெரிந்தது. வெளியே... சீமெந்துத் தூசினைத் தொடுகையில் உணர்ந்தேன். கழுவும் போது... சீமெந்தை பலப்படுத்த நீரில் ஊற வைக்க வேண்டும் என்பது நினைவுக்கு வந்தது. ஒரு வாரம் ஐஸ்க்றீம் பெட்டி ஒன்றுள் நீரில் ஊறிற்று கை. பிறகு மேலும் ஒரு வாரம் உலரவிட்டேன்.

அதன் பின்...
 கையின் மேல் கூட்டில் பறவை ஒன்று.
 கையில் மேல் ஒரு கை; அதன் மேல் சின்னத் தொட்டிச்செடி.

இனி இஷ்டம் போல் எதை வேண்டுமானாலும் வைத்து அலங்கரிக்கலாம்.

4 comments:

  1. அழகான வேலைப்பாடு. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும் சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்களுக்கும் என் அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  3. அழகா இருக்கு ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அழகா இருக்கு இமா. க்ரியேட்டிவிட்டி நிறைய உங்களிடம்...

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா