Friday 1 May 2020

கொரோனா காலத்துப் பிறந்தநாள்!


தோழி ஒருவரது பிறந்தநாள் இன்று. அருகில் உள்ள தபால் நிலையம் மூடி இருக்கிறது; தூரப் பயணத்திற்கு அனுமதி இல்லை; தபால்தலை வாங்க இயலாது. என்னிடம் ஏற்கனவே கட்டணம் செலுத்திய தபாலுறைகள் இருந்தன. அவற்றிலொன்றில் அடங்கக் கூடியதாக வாழ்த்திதழை அமைத்தேன். தினமும் இல்லையென்றாலும் தபால்சேவை இயங்குவது தெரிகிறது. நேரத்திற்கே தபாலில் சேர்த்தாயிற்று. கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

பயன்படுத்தியவை & செய்முறை சுருக்கமாக:-

  • வெள்ளை அட்டையை அளவாக வெட்டி...
  • அதன் முன் பகுதியில் மட்டும் சாட்டின் கடதாசி ஒட்டினேன்.
  • சாட்டின் பூக்களை 3D sticky dots கொண்டு உயர்த்தி ஒட்டினேன்.
  • அணிய இயலாதிருந்த காதணிகள் இரண்டின் ஒற்றைகள் (குறட்டினால் தண்டுப் பகுதியை வெட்டி நீக்கினேன்.) இவற்றையும் உயர்த்தி ஒட்டியிருக்கிறேன்.
  • சிறிய வெள்ளை மணிகள். அட்டையில் பசையினால் பொட்டுகள் வைத்து, மணிகளை இடுக்கியின் உதவியால் எடுத்து அதன் மேல் வைத்துவிட்டால் ஒட்டிக் கொள்ளும்.
  • இறுதியாக மூலைகள் இரண்டையும் அலங்காரமாக வெட்டி விட்டேன்.

    தோழி தமிழர் அல்ல, இதைப் பார்க்க மாட்டார். இருந்தாலும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி.

6 comments:

  1. அழகா இருக்கு இமா. அவங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்து அட்டை அழகாக இருக்கிறது. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. அவர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. மூவருக்கும் என் அன்பு நன்றிகள்... என்று சொன்னால் போதாது என்று மனம் சொல்கிறது. :-)

    ReplyDelete
  5. வாழ்த்து அட்டை அழகாக இருக்கிறது.
    தங்களது தோழிக்கு எமது வாழ்த்துகளும்...
    - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா