வெற்று + இலைதானே! பூக்காது, காய்க்காது என்பதனால் இதனை வெற்றிலைக் கொடி என்கிறார்களாம்.
ஆனால் அதன் சுவையே தனிதான்.
எங்களை வளர்த்த "மம்மா" (போர்த்துக்கேய வம்சாவளியினர்) வெற்றிலை போடுவார். அவருக்காக எங்கள் வீட்டில் ஒரு இரும்பு உரலும் உலக்கையும் இருக்கும். பிற்பாடு அவர் வராது நின்றதும் அது எம் சமையலறையில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அப்போதெல்லாம் மின்சார இயந்திரங்கள் இல்லை. இஞ்சி உள்ளி தட்ட... ரசத்துக்கு இடிக்கவென்று ராக்கையில் வைத்திருந்தோம். பிறகு ஊருக்குய்ப் போயிருந்த போது மச்சாள் வீட்டில் பார்த்தேன். எடுத்து வர விருப்பமாக இருந்தது. அவர்கள் பொருளாகிப் போனதன் பின் எத்தனையைத் தான் கேட்பது! இருந்தாலும்... எனக்கும் அதற்குமான உணர்வுப் பிணைப்பு அவர்களுக்கு இருக்கப் போவதில்லை. இப்போது கூட அது வெளியேற்றப்பட்டிருக்கலாம்.
எம் வாழ்வும் ஒரு வகையில் வெற்றிலை தான். உணர்வு இருக்கும் வரை, வேறு இணைப்புகளுடன் சேர்கையில் அதன் சிறப்பு தனிதான்.
இது அதிராவுக்கு நூறாவது இடுகைக்கு மொய் எழுதின வெற்றிலை. ;-)
ஆனால் அதன் சுவையே தனிதான்.
எங்களை வளர்த்த "மம்மா" (போர்த்துக்கேய வம்சாவளியினர்) வெற்றிலை போடுவார். அவருக்காக எங்கள் வீட்டில் ஒரு இரும்பு உரலும் உலக்கையும் இருக்கும். பிற்பாடு அவர் வராது நின்றதும் அது எம் சமையலறையில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அப்போதெல்லாம் மின்சார இயந்திரங்கள் இல்லை. இஞ்சி உள்ளி தட்ட... ரசத்துக்கு இடிக்கவென்று ராக்கையில் வைத்திருந்தோம். பிறகு ஊருக்குய்ப் போயிருந்த போது மச்சாள் வீட்டில் பார்த்தேன். எடுத்து வர விருப்பமாக இருந்தது. அவர்கள் பொருளாகிப் போனதன் பின் எத்தனையைத் தான் கேட்பது! இருந்தாலும்... எனக்கும் அதற்குமான உணர்வுப் பிணைப்பு அவர்களுக்கு இருக்கப் போவதில்லை. இப்போது கூட அது வெளியேற்றப்பட்டிருக்கலாம்.
எம் வாழ்வும் ஒரு வகையில் வெற்றிலை தான். உணர்வு இருக்கும் வரை, வேறு இணைப்புகளுடன் சேர்கையில் அதன் சிறப்பு தனிதான்.
இது அதிராவுக்கு நூறாவது இடுகைக்கு மொய் எழுதின வெற்றிலை. ;-)