Showing posts with label அறுசுவை. Show all posts
Showing posts with label அறுசுவை. Show all posts

Sunday, 3 May 2020

மைக்ரோவேவ் சாக்லெட் கேக்

நாக்கு இனிமைக்கு ஏங்கிற்று. சேமிப்பில் எதையும் காணோம். நேரம் அதிகம் செலவளிக்காமல், பாத்திரங்கள் கழுவுவதற்கும் இல்லாமல்.... என்ன செய்யலாம்!!!

ஏற்கனவே நான் அறுசுவையில் கொடுத்திருந்த மைக்ரோவேவ் ப்ரௌணி குறிப்பைத் தேடிப் பிடித்தேன். 

சீனி 250 ml!! சற்று அதிகம். ;( ஒவ்வொரு 1/8 பங்குத் துண்டிலும் 1/8 கோப்பை சீனியா! மாற்றலாம் அளவை - அரைக் கோப்பை பழுப்புச் சீனி + அரைக் கோப்பை ஈக்வல் சேர்க்கலாம். ஒரு நாளைக்கு 1/8 துண்டு மட்டும் சாப்பிடலாம். கொக்கோ பௌடர் வீட்டில் இல்லை, ஆனால் 'ட்ரிங்கிங் சாக்லேட்' இருக்கிறது. அதைப் பயன்படுத்தலாம்.  

ஈரமான பொருட்களுடன் சீனி & ஈக்வல் சேத்து அடித்துக் கொண்டேன். மீதிப் பொருட்களை ஒன்றாகச் சலித்து எடுத்து, ஈரக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து, கண்முன் தெரிந்த கண்ணாடிப் பாத்திரத்திலிட்டு 5 நிமிடம் மைக்ரோவேவ் செய்யப் போட்டேன். இரண்டு நிமிடங்கள் கழித்துப் பார்க்க கேக் முழுவதாகப் பொங்கி கிட்டத்தட்ட வழியும் நிலைக்கு வந்திருந்தது. சட்டென்று திறந்து ஒரு பீங்கானை கண்ணாடிப் பாத்திரத்தின் கீழ் தள்ளிவிட்டேன். ஐந்து நிமிடங்கள் கழித்து....

கேக் தயார். அலங்காரத்துக்காக மேலே சாக்லெட் ட்ராப்ஸ் வைத்துவிட்டேன். இம்முறை வழக்கமாக வருவதைப் போல் அல்லாமல் மிகவும் மெத்த்த்... மறுநாள் கூட மென்மை அதிகம் குறையவில்லை.

விருந்தாளி வரும் போது முன்பே அடித்து, கிண்ணத்தில் ஊற்றிவைத்துவிட்டால், அவர்கள் இருக்கும் போதே மைக்ரோவே செய்து சூடாகப் பரிமாறலாம்.

எந்த எலி மாட்டுகிறது என்று பார்க்கலாம்! :-)

Thursday, 14 December 2017

ஔவை சொன்ன‌ வாக்கு!!

நத்தார் கொண்டாடுவதற்கான‌ மனநிலை இன்னும் வரவில்லை. அதனாலேயே கொண்டாட‌ வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

செபா சொல்லுவார்... "சாகப் போற‌ மாடு, கண்டுக்குப் புல்லும் வைக்கோலும் சேர்த்து வைச்சுட்டுச் சாகிறது இல்லை," என்று. உண்மைதான். கன்று எப்படியாவது பிழைத்துக் கொள்ளும். இன்னொரு பசுவிடம் கெஞ்சியோ அடம் பிடித்தோ பாலருந்தலாம். அல்லது... இன்னொரு மாடு தீவனத்திற்கு, தன் சீவனத்திற்கு என்ன‌ செய்கிறது என்பதைக் கவனித்து அதன்படி நடந்தாலே பிழைத்துக் கொள்ளும். 

மனிதர்!! 

பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் அம்மா அம்மாதான். நான் நன்றாக‌, சந்தோஷமாக‌ இருப்பதைத்தான் அம்மா விரும்புவார். 

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்... ம்... ஔவையாருக்கு இதைச் சொல்வது சுலபமாக‌ இருந்திருக்கும். ஒரு வயதுக்கு மேல் வளர்ப்புத் தாயையும் விட்டு, தன் காலே தனக்குதவி என்று சுற்றுலாக் கிளம்பிய‌ பெண்மணி.  ;-) பெரிதாக‌ எதிலும் பிடிப்பு இருந்திராது, தமிழைத் தவிர‌. 

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும்
எமக்கு என்னென்றிட்டுண்டிரும். 

கடைசி ஆறு சொற்களையும் பிரித்துப் பிரித்து எழுதிப் பார்த்தேன். :‍) கவிதைத் தன்மை தொலைந்து போனாற்போல இருந்தது. தேடலாம் என்று இணையத்தில் உலாவ‌... கொடுமையொன்று கண்டேன்!! ;( படம் போட்ட‌ குழந்தைகள் அரிச்சுவடியில் 'ஔ' என்கிற‌ எழுத்துக்கு 'ஔவையார்' என்று எழுதியிருப்பார்கள். இணையத்தில் சில‌ ஔவைகளையும் ஏராளமான‌ அவ்வைகளையும் கண்டேன். ;( 

தமிழ், 'தமிழை வளர்க்க‌ நினைக்கும் தமிழராலேயே' மரித்து விடும் என்று முன்பே ஔவைக்குத் தெரிந்திருக்குமோ! அதனால் தான், 'நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும் எமக்கு என்ன!' என்று மனம் நோகாமலிருக்கும்படி அப்படிப் பாடி வைத்தாரோ!!! ;D

தட்டச்சு செய்வது சிரமமாகிப் போகும் என உணர்ந்து எழுத்து மாற்றம் வந்த‌ பின்பும், 'ஔ' 'ஐ' எழுத்துகளைத் தட்டுவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லாதபடிதான் இருந்துவருகிறது. ஆனாலும்... நாம் 'அய்யா' என்போம்; 'அவ்வை' என்போம். ;((

மீண்டும்... விஷயத்துக்கு வருகிறேன். மாண்டார் வருவரோ மாநிலத்தீர்!! வேண்டா... நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும் எனக்கு என்ன‌ என்று இட்டு உண்டு இருக்கலாம்.  அதன் ஒரு படியாக‌... இந்த‌ அலங்காரம். 
கையிலிருந்த‌ பொருட்களை வைத்துச் செய்தேன். இம்முறை அழகான‌ இலைகள் அகப்பட்டன‌. ஒரு சாடியில் சில‌ மிட்டாய்களும் இருந்தன‌. இவை அம்மா வீட்டிலிருந்து எனக்குக் கடத்தப்பட‌ பொக்கிஷங்கள். தன்னைச் சந்திக்க‌ வரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக‌ மிட்டாய்கள் வைத்திருப்பார்.

முன்பெல்லாம் நிறமற்ற‌ செலோஃபேன் கடதாசியில் மிட்டாய்களைச் சுற்றுவேன். இம்முறை கையிலிருந்தது சிவப்பு செலோஃபேன். 
நீளமாகத் தெரிபவை ஜெல்லி மிட்டாய்கள். 
செய்முறை இங்கே ‍- http://www.arusuvai.com/tamil/node/30177 

Thursday, 25 June 2015

நன்றி


அண்மையில் இமாவின் உலகில் புதிய உறவுகள் சிலர் இணைந்திருக்கிறீர்கள். அவர்களுக்கும் அவர்கள் இங்கு வரக் காரணமாக இருந்த நட்புக்களுக்கும் வலைச்சரத்திற்கும் VGK அண்ணாவுக்கும் என் அன்பு நன்றிகள்.

ஸ்டைலாக தளகுளி எடுத்து வைச்சிருக்கிறன் ஆளுக்கொன்று சாப்பிடுங்கோ. ;)

Saturday, 19 July 2014

ஆப்பிள்கள்

[DSC07604.JPG]
"அம்மா! ஆப்பிள்,"
"எதுக்குடா கத்துற!" திரும்பக் கத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தாள். அது பையோடு தரையில் உட்கார்ந்திருந்தது.

"மேசைல வைச்சா என்னடா! இப்போ எனக்கு தேவையில்லாத வேலை. முதுகு பிடிச்சுக்கப் போகுது.
சோம்பேறித்தனம் தான். நாலு ஆப்பிள் தூக்கினால் முதுகு பிடிக்குமா என்ன! அவள் முணுமுணுத்துக் கொண்டு தூக்கி வைக்க பையன் மெதுவாகச் சொன்னான், "ஆப்பிள் சாப்பிட்டா எதிர்ப்புச் சக்தி பெருகும். முதுகுப் பிடிப்பு வராதும்மா."
ஏற்கனவே கடுப்பிலிருந்தாள். காலையிலிருந்து என்னவோ ஒரு எரிச்சல். இப்போ இவன் வேறு. பழத்தட்டை நிரப்பி விட்டு பையைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனாள்.

ஹாலை சுத்தம் செய்ய நினைத்து எல்லாவற்றையும் பரவிப் போட்டிருந்தாள். இடை நடுவே மீண்டும் அசதி தலை காட்ட அப்படியே ஒரு சோஃபாவில் சரிந்தவள் தூங்கிப் போனாள்.


தொலைபேசி அழைத்து எழுப்பிற்று. "பின்னேரம் நாங்கள் அந்தப் பக்கம் வாறம். நீங்கள் வீட்டில இருப்பீங்கள் எண்டால் உங்களையும் வந்து பார்க்கலாம் எண்டு நினைச்சம்."

வெகு நாட்களாக இவர்கள் வரவை எதிர்பார்த்திருந்தாள். அவளுக்குப் பிடித்த இலங்கை நட்பு வட்டம். ஆனால்... இப்போது வீடு இருக்கும் நிலையில்!!

"பிரபூ... இதை ஒதுக்க கொஞ்சம் உதவி செய்யேன்."
பிரபு வந்தான். அம்மா சொன்னது போல எல்லாம் செய்து கொடுத்தான்.

"முடியலைன்னா நாளை பண்ணலாம்ல! எதுக்கு இப்படி சிரமப்படுறீங்க?" என்றான்." கிட்டத்தட்ட வேலை முடியும் சமயம் ஒரு ஆப்பிளை எடுத்துக் கடித்தான். அம்மாவுக்கும் ஒன்று கொடுக்க, "இப்போ வேண்டாம்," என்றாள்.

"சும்மா சாப்பிடும்மா. சாப்பிட்டா..."

திரும்ப நோய் எதிர்ப்புச் சக்தி என்று ஆரம்பிக்கப் போகிறானோ என்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
"ஆன்டி வர மாட்டாங்க."
"அவங்கதான் டாக்டராச்சே!"
~~~~~~~~~~~
இன்னொரு ஆப்பிள் கடி இங்கே

Tuesday, 27 May 2014

சீமாட்டி 1 2

இதற்குச் சீமாட்டிவண்டு என்று பெயரிட்டவர்.... வானதி.:-)
பொன்வண்டானால் பொன்னிறமாக இருக்வேண்டும். பெண்வண்டானால்... (ladybug) ஆணாக இருத்தலாகாது. :) இது பொரிவண்டு என்று நண்பரொருவர் சொன்னார். என்னைப் பொறுத்தவரை... இவை பின்வண்டுகள் - pin cushions ;)

நீங்கள் என்ன பெயர் சொல்கிறீர்கள்!!

முதல் முறை செய்த வண்டு... வயிற்றில் 'வெல்க்ரோ' ஒட்டி வைத்திருந்தேன். வெல்க்ரோவின் மறுபாதி தையலியந்திரத்தில் இருக்கும். வேலை நேரம் அங்கே வண்டார் ஒட்டிக் கொள்வார். மீதி நேரம் மேசையில் இருப்பார்.

சில மாற்றங்களோடு இரண்டாம் முறை செய்த வண்டிற்கான செய்முறை இங்கே

அப்டியானால்
து!!! :-)
```````````
ஒரு வருடத்தில் 365நாட்கள். இது 365வது இடுகை என்கிறது என் கணக்கு. இத்தனை வருடத்தில் ஒரு வயதுதான் ஆகி இருக்கிறதா என் உலகிற்கு! ஹ்ம்! ;(

Wednesday, 15 January 2014

அறுசுவையும் நானும்

ஏற்கனவே  அறுசுவையில் உள்ள எனது படைப்புகளுக்கான தொடர்புகளை உலகில் அங்கங்கே இணைத்திருக்கிறேன்.
இப்போ புதிதாக...
'தொட்டுக்கொள்ள...'
~~~~~~~~~
தேவையான எல்லாவற்றையும் ஓரிடமாகத் தொகுத்து வைத்தால் தேடுவதற்குச் சுலபமாக இருக்கும் என்கிற எண்ணத்தில் இந்தத் தொகுப்பு. என்னைப் பின்தொடரும் கவினையில் ஆரவமுள்ள, தமிழ் படிக்கத் தெரியாத நட்புக்களுக்காக ஆங்கிலத்தில் சிலவற்றைக் கொடுத்திருக்கிறேன்.

க்றிஸ் கைவினைகள்

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 ஏஞ்சல் செய்தவை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அம்மா செபா செய்தவை

Silver Bells
Flower Arrangement
Paper ducks - Origami / Papaer Serviette foldings
First communion crown
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அலனது சமையல்கள்

Tuesday, 29 October 2013

அண்டாட்டிக்கா! ;)

part 1 - http://www.arusuvai.com/tamil/node/26973

part 2 - http://www.arusuvai.com/tamil/node/26974

குப்பைத் தொட்டியில் போடுமுன்னே....
ஒரு குழந்தை விளையாட்டு. ;)
அதை அறுசுவைக்கு அனுப்பி...
அழகு பார்த்து...
சந்தோஷமாகச் சின்னவர்களிடம் காட்ட - கேட்டார்கள்...

"அங்கின பனை மரமும் இருக்கோ மம்மி!!!" ;))))


Friday, 18 October 2013

வசந்தம் வருது


வசந்தம் வருது வசந்தம் வருதா! வயசுக்கு வந்தேனா! பொம்மைக் குழந்தை விளையாடப் பிடிச்சிருக்கு. அதை என்னருகே தூங்க வைச்சா இதமாய் மனசிருக்கு. மக்குப் பிள்ளை அது பேச மாட்டேன் என்குது கௌவித் தூக்கினாலும் கத்த மாட்டேன் என்குது. வசந்தம் வருது சொல்லுது மனசு சாப்பிடாமல் புல்லெல்லாம் சேர்த்து வைக்கச் சொல்லுது. வாசமான வைக்கோலும் வளைத்து வைக்கச் சொல்லுது. என் பிள்ளை அதன் மேலா!! குத்தாதா குச்சுகள்! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்றால் என் குஞ்சு மட்டுமென்ன பித்தளையா? மெத்தை வேண்டும் மெத்தென்று வல்லவளுக்குப் புல்லும் ஆயுதம்தான் - ஆனால் புல் மெத்தை போதாது என் செல்லச் சீமாட்டிக்கு. மெத்தென்று, மெத்து மெத்தென்று மெத்தை செய்வேன். மெல்லிதாய்ப் பறக்கும் மேகக் குவியல் போல மேனியெல்லாம் பஞ்சிருக்க இலவம் பஞ்செதற்கு! பிஞ்சு போச்சென் சின்ன வால் பஞ்சாய்ப் பதிப்பேனதை. என் பிள்ளைக்கில்லாதது எனக்கு மட்டும் எதற்காம்! அங்கங்கு கொஞ்சம் பிய்த்துப் பிய்த்து வைத்தால் பொன்னான படுக்கை சுகமாய்த் தூங்கும் என் குழந்தை - அது மென் குழந்தை! ஒன்றா! ஒன்பதா! எத்தனை பெறுவேன் நான்! அத்தனையும் கண்ணாய் வளர்த்தெடுக்க வேண்டும். பூனை கண்ணில் பட்டுவிடக் கூடாது. பூப்போடும் ஆலா தூக்க விடக் கூடாது. தூங்கும் சமயம் தூங்காது இருப்பேன் நான். துள்ளித் திரிந்தால் துரிதமாய் அடக்கிடுவேன். என்னைப் போல் அழகாய் எல்லாம் தெரிந்தவளாய் மெத்தென்று முகிலாய், தூக்கிய செவிகளும் சிவந்த கண்களும் சின்ன மூக்கும் செப்பு வாயும் சிப்பிப் பல்லும் பட்டுப் பாதமும் கொண்டு, வருவாளா! இல்லை... எலி பெற்ற பிள்ளை போல் கோணற்தலையும் குண்டுக் கண்ணும் குட்டி வயிறும் குச்சு வாலுமாய் குழந்தை பெறுவேனா! பொறுத்திருந்து பார்ப்பேன். அது வரை... பொம்மை இருக்கு பொழுது போய்விடும். - ட்ரிக்ஸி க்றிஸ்

Thursday, 3 October 2013

மைக்ரோ எள்ளுருண்டை

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டாமா! ;)))

மகியின் ஆங்கில வலைப்பூவில் கொடுக்கப்பட்டிருந்த கருப்பு எள்ளுருண்டை குறிப்பின் கீழ், பாதிக்குப் பாதி வெள்ளை எள்ளும் கருப்பு எள்ளும் கலந்து செய்வதாகக் கருத்துச் சொல்லியிருந்தேன்.

இதற்கு முன் கருப்பு எள்ளு வாங்கியதில்லை. முதல் தடவையாக சாப்பிட்டிருக்கிறோம். வாங்கி வைத்தது இதிலும் தளகுளி நன்றாக வருமா என்பதை முயற்சிப்பதற்காக.

காற்கோப்பை கருப்பு எள், காற்கோப்பை  வெள்ளை எள் சேர்த்து வறுத்து....
4 மேசைக்கரண்டி அளவு சர்க்கரையை உடைத்துப் போட்டு ஆறவிட்ட எள்ளை அதனோடு சேர்த்து சுற்றி எடுத்தேன். சின்னதாகப் பிடிக்க முயன்றேன். இயலவில்லை. பத்து செக்கன் மைக்ரோவேவ் செய்து, கலந்து, மீண்டும் பத்து செக்கன் மைக்ரோவேவ் செய்து, கலந்துவிட்டு குட்டிக் குட்டியாக (பெரிய கோலி அளவு) 21 உருண்டைகள் பிடித்து வைத்தேன்.

படம் சுமார்தான், பொறுத்தருள்க. ;)

அடுத்த தடவை bring a plate for morning tea என்றால் பாடசாலைக்கு எடுத்துப் போகலாம். கட்லட்டும், கில் மீ டேட்ஸும், பட்டீஸும் எல்லோருக்கும் பிடித்திருந்தாலும் பழகி விட்டது. வித்தியாசமான உணவுப் பொருட்களை முயற்சித்துப் பார்க்க விரும்புபவர்கள் அவர்கள். இது சற்றுப் புதுமையாக இருக்கும். சுவை... நிச்சயம் அவர்களுக்குப் பிடிக்கும். எனக்கும் சிரமமில்லாத சமையல்.

மகியின் விதவிதமான எள்ளுருண்டை குறிப்புகள் இங்கே.

Thursday, 8 November 2012

ஆலா! ஆலா! பூப் போடு!








இது ஆலா போடாத (ஆள் போட்ட) பூ. ;)











யாராவது திரும்பவும் 'இது செயற்கை நகமா இமா?' என்று கமண்ட்டினீங்க, "கர்ர்ர்ர்" கிடைக்கும். ;)

போட்டுப் பார்க்க விரும்பினால்.... போடும் முறை 'அங்கே' 


 






அறுசுவை உறுப்பினர்கள் கருத்துக்களை அங்கேயே பதிவிடலாம்.

Thursday, 25 October 2012

ஆப்பிள் கு(கூ)டை

பொழுது போக மாட்டேன் என்றது; சேகரிப்பைக் குடைந்து கொண்டிருந்தேன். கண்ணில் பட்டது சென்ற வருடம் boxing day அன்று மலிவு விலையில் வாங்கி வந்த ஆப்பிட்பழங்கள். ஏதாவது கைவேலைக்கு உதவும் என்று வைத்திருந்தேன். இன்று பார்க்க ஒன்றிரண்டு பிளவுபட்டுத் தெரிந்தன. steirofoam கொண்டு தயாரானவை அவை. காலநிலை மாற்றம் இப்படி மாற்றிவிட்டிருக்கிறது போல. இனியும் விட்டு வைத்தால் பயனில்லாமலே குப்பைக்குப் போகும் என்று தோன்றிற்று.

வீட்டில் எப்பொழுதும் மேலதிகமாக சாப்பாட்டுக் குடைகள் இரண்டாவது வைத்திருப்பேன்.
1. இவை அதிக காலம் தாங்குப் பிடிக்காது.
2. ஊரில் பெரிய 'சாப்பாட்டு மூடி' இருந்தது. கிணற்றடியில் கொண்டுபோய் வைத்துக் கழுவி எடுக்கலாம். இவையோ கழுவிப் பாவிக்க இயலாதவை. அடிக்கடி மாற்றிவிடுவது நல்லது.
3. தப்பித் தவறி எனக்குப் பிடிக்காத உணவுப் பொருள் (பறவை) பட்டுவிட்டால் தூக்கித் தூ...ரப் போட்டு விடலாம். ;)
4. கேக் செய்யும் போது மேலதிகமாக ஒன்றிரண்டு இருந்தால் உதவும்.
இந்தக் காரணங்களுக்காக.... 'டொலர் ஷொப்' பக்கம் போனால் ஒன்றிரண்டு வாங்கி வந்து வைப்பது உண்டு.

ஆப்பிள்கள் ஆறுதான் இருந்தன. நத்தார் மரத்துக்கான சோடினைப் பொருட்கள் இருந்த பெட்டியை ஆராய மேலும் இரண்டு அளவுகளில், மொத்தம் ஐந்து பழங்கள் கிடைத்தன.

6+3+2 = !!
குடையிலிருந்த ஆறு கம்பிகளில் மூன்றில், இரண்டிரண்டு பழங்கள் - 6
 
மீதி மூன்றில் ஒவ்வொரு பழம் - 3
உள்ளே - 2

தங்க நிற நூல்களை வெட்டி விட்டு பச்சை நூல் கொண்டு இலைகளைக் குடையோடு தைத்து... தையல் விட்டுவிடாமல் nail polish - top coat பூசி.... (ஒரு போத்தலில் அடியில் மட்டும் கொஞ்சம் மீந்து இருந்தது. தடிப்பாகிவிட்டது; நகத்திற்கு இனி ஆகாது. அந்த நகத்தோடு சாப்பிடலாம் என்றால் இதுவும் ok என்று மனது சொன்னது.) ;) வெடிப்புகளின் மேல் சிவப்பு நகப்பூச்சு தடவி.... சாப்பாட்டு மேசைக்கு எடுத்து வந்தாயிற்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~

0---- கு 1
இது போல் முன்பு செய்த செர்ரிக் கு(கூ)டை 'அங்கே' http://www.arusuvai.com/tamil/node/17356

0---- கு 2
தட்டச்சு செய்கையில் சுற்றிய நுளம்புத்திரி - 
            ஆ...தியில், அதாவது பிளாத்திக்குக் கூடை வருமுன்பாக, எங்கள் ஒழுங்கையில் திடீரென்று எப்போவாவது 'ஊத்..தக்..கூ..டை, சாப்..பாட்..டு மூ..டீ.....' என்றொரு குரல் கேட்கும். முதல் முதல் பரவை முனியம்மாவை திரையில் பார்த்த போது மூளையில் மீண்டும் அதே குரல்... அந்த அக்கா தோற்றம், குரல் மட்டுமல்லாமல் கைவீச்சு, நடை எல்லாம் ஒரே மாதிரி இருக்கும்.

இயற்கையோடு இயைந்து போகும் மூங்கிற் கூடை காணாமற் போய் ப்ளாத்திக்கும் கடந்து, இப்போ இந்த வலைக்கூடை மேசைக்கு வந்திருக்கிறது.

இது போல் நீள் சதுரமானவைதான் பெரியவர் சின்...னவராக இருந்தபோது நுளம்பு, ஈ வலையாகப் பயன்பட்டது. இரண்டாம் மாதமே தூர உதைத்து விட்டுச் சிரிப்பார். கம்பி காவலிடத்திலிருந்து வெளியே எட்டிப் பார்க்கும். அதைச் சரியான இடத்தில் பிடித்து வைத்துத் தைக்க வேண்டும் அடிக்கடி. எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கிறேன். பாதுகாப்பு இல்லை என்று அப்போது நினைக்கவே இல்லையா நான்!! ஹ்ம்! ;(

அவருக்கு அது அளவில்லாது போனதன் பின் 'கேக்' மூடுவதற்காக என்று கழுவி எடுத்து வைத்தது நினைவு இருக்கிறது. இப்போ இதற்கென்றே வாங்குகிறேன்.


0---- கு 3 
இமா எடுத்த இந்தப் படம் வீணாகி விடாமல்.... பார்த்து ரசியுங்கள். ;)

Wednesday, 10 October 2012

மியாவுக்கு ஒரு 'எலி பண்'

மியாவ் ஒரு முறை 'அங்கே' ஒரு கறி பண் குறிப்பு கொடுத்திருந்தார்.
அதை முயற்சிக்கையில்....
அவருக்குப் பிடித்த எலி ஒன்று செய்து...
அவரையே எலியாக்க முயற்சித்தேன். முடியவில்லை. செபாவை எலியாக்கினேன். ;)

'அங்கே' கருத்துக்களோடு படமும் வெளியாகி இருந்தது; இப்போ இல்லை. அதனால் இங்கு பகிர்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். வால் தெரியும் படமும் இருக்கவேண்டும் எங்கோ. கிடைத்ததும் இங்கு இணைக்கிறேன்.

பி.கு
அதிராவின் வேண்டுகோளுக்கிணங்க வெளியாகிறது இந்த இடுகை.

Monday, 10 September 2012

மாமா, யமி, பாட்டி & இமா

இவர் எங்கள் யமி.

அறுசுவையில் அடிக்கடி 'அமானுஷ்யம்' இழை முகப்பில் வருகிறது. எனக்கு யமி நினைப்பு வந்தது. படத்தைத் தேடிப்பிடித்தேன். கூடவே செபாவின் ஒரே தம்பியின் நினைப்பும் வந்தது. ;(

'இமாவின் பாட்டி கண்ட 'அது' என்னும் தலைப்பில் ஒரு பேய்க்கதை ;) எழுதினேன். 1997 செப்டெம்பர் 13 - 15 க்கு இடைப்பட்ட காலப்பகுதியின் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் அது.

15வது வருட நிறைவையிட்டு அனுபவங்கள் இரைமீட்கப்படுகின்றன.
பாட்டி இறந்து பதின்மூன்று வருடங்கள் நிறைவாகிவிட்டது. யமி இறந்தும் பத்து வருங்களாகிவிட்டது.

விரும்பினால் படிக்கலாம். ;) எச்சரிக்கை - கதை சிறியதுதான் ஆனால் அடுத்தடுத்த பக்கங்களிலும் தொடர்ச்சி இருக்கும்.

Friday, 24 August 2012

தொலைந்ததும் மீண்டதும்

தனிமை பெரிதாகத் தெரிந்த காலம் அது - அறுசுவையில் பலவற்றையும் முயற்சித்துக்கொண்டு இருந்தேன். ஒருமுறை முயன்றது மஹிஸ்ரீயின் இந்த ஒரிகாமி நாய்க்குட்டி.

முன்பே அறிமுகம்தான்... கற்பிக்கையில்... ஆறாம் ஆண்டு ஆங்கிலநூலில் என்பதாக நினைவு. அதனாலேயே பார்த்ததும் ஒரு பிரியம் வந்தது. செய்து அறுசுவைக்கும் அனுப்பி வைத்தேன். கருத்துக்கள் வரிசையில் வெளியானது; தற்போது இல்லை. அதனால் அட்மினிடமிருந்து எனக்கு உரிமை மறுப்பு அறிவித்தல் வராது என்று ஒரு நம்பிக்கை. :)

இப்போழுது மீன்தொட்டியைச் சுற்றி பாசி இல்லை, வேறு அமைப்பு இருக்கிறது. நாய்க்குட்டியின் தலைக்கு மேல் தெரியும்! வாத்தும் காலுடைந்து நிறமிழந்து குப்பைக்குப் போய்ச் சில ஆண்டுகளாகிவிட்டது.

மறந்துபோயிருந்த நினைவுகளை மீட்டு, இடுகையிடக் காரணமாக இருந்தது அறுசுவையில் வனிதாவின் நேற்றைய கைவினை. நன்றி வனிதா.

Wednesday, 15 August 2012

முள்ளெலியும் ரயில் சினேகமும்

இரண்டாம் வகுப்பில் கிடைத்த பரிசுப் புத்தகம் ஒன்றிலிருந்து முள்ளெலிகள் எனக்குப் பரிச்சயமாயின.

'சித்திரக் கதைகள்' என்கிற அந்தப் புத்தகம் அழகழகான முள்ளம்பன்றிக் கதைகள் சிலவற்றைக் கொண்டிருந்தது. அவை முள்ளெலிகளா முள்ளம்பன்றிகளா என்று சிந்திக்கத் தெரியாத வயது அது. ஆனாலும் இந்தப் பிராணிகளுக்கு என் மனதில் ஒரு... 'மென்மையான மூலை' நிரந்தரமாகிவிட்டது அப்போதிருந்து.

ஒரு வருடம் கழித்து ஓர்நாள் உண்மையாகவே முள்ளம்பன்றியைக் கண்டேனே!
செபா பாத்திரம் தேய்க்கும் இடத்தில் விம்மும் (vim) தும்பும், ஒரு பழைய தயிர்ப்பானையில் அடுப்புச் சாம்பலும் வைத்திருப்பார். என்னைக் கண்டதும் அந்தப் பானையில் தூங்கிக் கொண்டிருந்த முள்ளம்பன்றி சட்டென்று கிளம்பி ஓடிவிட்டது. ;(

சரியாகப் பார்த்து ரசிக்கக் கூட முடியவில்லையென்ற சோகத்தோடு செபாவிடம் சொன்னேன். எப்போதும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு இருப்பார் அவர். கண்ணைச் சுருக்கிப் பார்த்து, "முள்ளம்பன்றி!! அதுவும் தயிர்ப் பானையிலா!!!! ம்.. பெருச்சாளியைப் பார்த்திருப்பீங்கள்," என்றார். "புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்று போயிற்று எனக்கு. ;(


நியூசிலாந்து வந்ததன்பின்னால் கண்டேன் என் அன்பு முள்ளெலிகளை. hedgehogs - அழகு ஜீவராசிகள் அவை. தத்தக்கா பித்தக்கா என்று குழந்தை தவழுவது போலிருக்கும் அவர்கள் நடை. எடுத்த படங்கள் எல்லாம் ஏதோ வைரஸ் கொண்டு போய் விட்டது அப்போதிருந்த கணனியோடு. ;(

அதை விடுங்கோ. சமீபத்தில கொஞ்சம் ஐசிங் மிஞ்சிப் போக முள்ளெலி செய்து விளையாடினன். பிறகு செபா அயலாருக்கு அனுப்பியாச்சுது. செய்முறையை அறுசுவைக்கு அனுப்பினன்.
செபா வீட்டுப் பக்கமும் முள்ளெலி இருந்திருக்கிறது.

இந்த... முள்ளெலி என்கிற சொல்லை எங்க இருந்து பிடிச்சன்!! ம்!! யோசிச்சு.... அறுசுவையில தேட... வந்ததே ஒரு பழங்கதை. ;D
L போர்ட் சந்தூஸ், மஞ்சள் மகி, அதிரா, செபா, ஹுஸைனம்மா, வாணி, ஆசியா எல்லாரும் அவரவர் செல்லங்களோட 'ட்ரெய்ன்'ல போயிருக்கிறம். ;D விரும்பினால் நீங்களும் போய் இரைமீட்டுப் பார்க்கலாம். ;)

Tuesday, 17 July 2012

கரும்'பூ'

என் இலங்கை மாணவர் ஒருவர் (உறவினரும் கூட) முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த இடுகையொன்று என்னைக் கவர்ந்தது. கரண்டிகளும் வெற்றுப் போத்தலொன்றும் கொண்டு ஆன விளக்கு அலங்காரம் அது. கோமதி கூட சமீபத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மின்விளக்கின் சூட்டிற்கு ப்ளாத்திக்கு உருகி விடும் என்கிற பயம் இருந்தது. அப்படி ஆனால் என் பிரயாசை, நேரம் எல்லாம் வீணாகிவிடும்; ஒரு 'வாஸ்' செய்யலாம் என்று கரண்டிகள் சேகரிக்க ஆரம்பித்தேன்.


கிடைத்த கரண்டிகளை அவ்வப்போது வெட்டி வைப்பேன். மெதுவாக நகர்ந்துகொண்டு இருந்தது (இருக்கிறது) வேலை.

இடை நடுவே 'டெய்ரி' வைத்திருக்கும் தோழி ஒருவர் தொலைபேசியில் அழைத்து... "யோகர்ட் தொகுதி ஒன்று காலாவதியாகிவிட்டது. விநியோகஸ்தர்கள் தூக்கிப் போடச் சொல்கிறார்கள். கரண்டிகள் உங்களுக்கு வேண்டுமா?" என்றார். "நிறைய வேண்டும்," என்றேன். இவற்றைக் கொண்டு என்ன செய்தேன் என்பதை அறிய....
http://www.arusuvai.com/tamil/node/23289 பார்க்கவும்.

மின்விளக்கு அலங்காரம்தான் இன்னமும் பாதி வழியில் நிற்கிறது. ;( எங்கள் பாடசாலை சிற்றுண்டிச்சாலை ஊழியரிடம் நாளை விசாரிக்கப் போகிறேன். எனக்கு அதிஷ்டம் இருந்தால்... ;) அவர்களுக்கும் ஏதாவது காலவதியாகும். ;)

Saturday, 7 July 2012

விருந்தாய் வருது... விருது

கிரிக்கெட் வீரரான என் இளைய மகனுக்காக வார இறுதியில் செய்தது இது. செய்முறை விளக்கம் தற்போது அறுசுவையில்...
http://www.arusuvai.com/tamil/node/23239

Saturday, 23 June 2012

'A' Cake

என் குட்டித் தோழி ஏஞ்சல் பிறந்தநாளுக்காக ஜனவரியில் செய்த கேக் இது. இப்போதான் வெளியிட நேரம் அமைந்தது.

செய்முறை விளக்கம் இங்கே -> http://www.arusuvai.com/tamil/node/23061

Wednesday, 23 May 2012

மை தீர்ந்த பேனைகள்

வீட்டில் குப்பைக் குறைப்பு தொடர்கிறது. ;) சென்ற வாரம் மாற்றுருக் கொண்டு மெத்தென்று மலர்ந்திருக்கும் பேனைப்பூக்களில் இரண்டு இங்கே.

மீதி விபரம்... அங்கே  -> http://www.arusuvai.com/tamil/node/22760