
24/12/2011 - மதியம் கிறிஸ்மஸ் மரம் வைத்துக்கொண்டிருந்தோம். விருந்தினர் வந்தனர். அவர்கள் சென்றதும் தேநீர்க் கோப்பைகளை எடுத்து வைப்பதற்குள்... மேலே சாண்டலியரில் இருந்து ஒரு தூக்கணம் விழுந்து 3 துண்டாகிப் போனது சோசர். ;(

அழகாக உடைந்திருந்ததைத் தூக்கிப் போட மனதில்லை.

துண்டங்களைப் பொருத்திப் பார்க்க அதிரா தெரிந்தார். ;) செரமிக் பெய்ன்ட் கொண்டு வரைந்தாயிற்று.
பூனைக்கு எத்தனை மீசை!!
யாரும் பதில் சொல்லவில்லை. ;(
24 (12+12) என்று தெரியவந்தது; அதுவும் முகத்தை விட நீளமாக இருக்குமாம். அத்தனை வரைந்தால் அழகாக இராது என்று தோன்றிற்று. 3 சோடிகள் மட்டும் வரைந்தேன்.

செவிகளை இப்படி வைத்தால்!!

கடைசியில் hot glue கொண்டு இப்படி ஒட்டியாயிற்று. பொருத்தமாக stand ஒன்றும் கிடைத்தது.
"மியாவ்வ்!"
மியாவ் படம் கீறி வைத்தால் எலித்தொல்லை இராதாமே! உண்மையா!!!